>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 20 நவம்பர், 2019

    மீன்பிடிக்கலாமா?... முக்கொம்பு...!!

     Image result for முக்கொம்பு



    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com 


    திருச்சியில் இருந்து ஏறத்தாழ 22கி.மீ தொலைவிலும், நாமக்கலில் இருந்து ஏறத்தாழ 67கி.மீ தொலைவிலும், சமயபுரத்தில் இருந்து ஏறத்தாழ 23கி.மீ தொலைவிலும் அமைந்து அனைவரையும் கவரும் ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது.

    முக்கொம்பு அணை காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் மேல் கட்டப்பட்டதாகும்.

    மாநகரான திருச்சிக்கு நெருக்கமாக அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத்தலமாக இது உள்ளது.

    இங்கு கேளிக்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மீன்பிடித்தல் மற்றும் ஒரு சில விளையாட்டுகள் என பல இடங்கள் உள்ளன.

    இதன் விளைவாக இந்த இடமானது மிகப்பிரபலமான சுற்றுலாத்தலமாகவும், வார இறுதியில் நேரத்தை செலவிடுவதற்கு ஏற்ற நுழைவாயிலாகவும் திகழ்கிறது.

    ரம்மியமான இடம். குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் மகிழ்ச்சிகரமாக பொழுதுபோக்கக்கூடிய இடம்.

    திருச்சிக்கு சுற்றிப்பார்க்க செல்லும் மக்கள் முக்கொம்பை சுற்றிப்பார்க்காமல் செல்ல மாட்டார்கள்.

    இந்த இடத்தை தமிழ்நாடு சுற்றுலாத்தலம் சிறந்த சுற்றுலாத்தலமாக அறிவித்துள்ளது. காவிரி, கொள்ளிட ஆற்றுப் பாலத்தைச் சுற்றித் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவது அவ்வளவு அழகாக இருக்கும்.

    காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளுக்கு இடையேதான் பொதுப் பூங்காவும், சிறுவர் பூங்காவும் உள்ளன.

    குழந்தைகள் குதூகலமாக விளையாடி மகிழ, தொங்கும் ஊஞ்சல், சறுக்கு ஊஞ்சல், குட்டி ராட்டினம், சீசா என பல வகைகள் உள்ளன.

    குழந்தைகளுக்கு என குட்டி நீச்சல் குளமும் இங்கே உள்ளது. ஒவ்வொன்றிலும் குழந்தைகள் விளையாட ஆரம்பித்தால், அங்கிருந்து வரவே மாட்டார்கள்.

    அந்த அளவுக்குக் குழந்தைகள் பொழுதைக் கழிக்க ஏற்ற இடம். காலை முதல் மாலை வரை இங்கு குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாக இருந்து வர ஏற்ற இடமாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    எப்படி செல்வது?

    திருச்சிக்கு அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

    எப்போது செல்வது?

    அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

    எங்கு தங்குவது?

    திருச்சியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

    இதர சுற்றுலாத்தலங்கள் :

    ஸ்ரீரங்கம்.

    மலைக்கோட்டை.

    சமயபுரம்.

    திருவானைக்காவல்.

    கல்லணை.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக