Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 26 நவம்பர், 2019

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா?


 





இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



மகாராஷ்டிரா துணை முதல்வராக கடந்த சனிக் கிழமை பதவியேற்று இருந்த அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் திருப்பங்கள் நாளுக்கு நாள் அதிரடியாக நடந்து வருகிறது. சனிக்கிழமை அந்த மாநிலத்தின் துணை முதல்வராக பாஜகவுடன் கைகோர்த்து பதவியேற்றுக் கொண்ட அஜித் பவார் தனது பதவியை தற்போது ராஜினாமா செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் இன்று 3.30 மணிக்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பத்திரிக்கையாளர்களை சந்திகிறார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து பல்வேறு திருப்பு முனைகள் ஏற்பட்டு வருகிறது. சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 105 இடங்களிலும், சிவ சேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன. சுழற்சி முறையில் முதல்வர் பதவி தங்களுக்கு வழங்க வேண்டும் என்று சிவ சேனா கேட்டதால், ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில், பாஜக, சிவ சேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி வாய்ப்பு வழங்கினார். அப்படி இருந்தும் யாராலும் ஆட்சி அமைக்க முடியவில்லை.
Mumbai: Maharashtra Chief Minister Devendra Fadnavis to address the media at 3.30 pm today. https://t.co/ggx7So6d8g
— ANI (@ANI) 1574758159000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!