Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 11 டிசம்பர், 2019

திருமணம் ஆன 4வது நாளில் புதுப்பெண் கர்ப்பம்..! 80's கிட் சோகம்... நடந்தது என்ன?

 Image result for திருமணம் ஆன 4வது நாளில் புதுப்பெண் கர்ப்பம்..! 80's கிட் சோகம்... நடந்தது என்ன?
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு நீண்ட நாட்களாக மணப்பெண் தேடி வந்துள்ளனர். ஆனால் அவருக்கு எந்த வரமும் அமையவில்லை. இதனால் அவர்களுக்கு தெரிந்த கல்யாண புரோக்கரை அணுகி மணப்பெண் தேட வைத்துள்ளனர்.
இதையடுத்து வால்பாறையில் 27 வயது தக்க இளம்பெண்ணுடன் பொள்ளாச்சி வாலிபருக்கு திருமணம் செய்ய முடிவானது. நீண்ட நாட்களாக வரம் தேடி பார்த்து வந்த நிலையில் தற்போது வாலிபருக்கு திருமணம் நடக்கவிருப்பதால் அவரது பெற்றோர்கள் கல்யாணத்தை தடல் புடலாக நடத்தினர்.
மேலும் மணமகன் வீட்டிலிருந்து பெண் வீட்டிற்கு 12 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணத்தையும் வழங்கியுள்ளனர். திருமணம் நடந்த கையோடு புது தம்பதிகள் தேனிலவு செல்லவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்த நிலையில் புதுப்பெண் திடீரென வீட்டில் வாந்தி எடுத்து மயக்கி விழுந்துள்ளார்.

பித்தம் ஏதேனும் இருக்கும் என நினைத்துக்கொண்டு அந்த வாலிபர் தனது மனைவியை அழைத்து கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இளம்பெண் கர்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்ட வாலிபருக்கு தலையில் இடி விழுந்ததை போல ஆயிற்று.
இதையடுத்து தனது மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தடைந்தார் வாலிபர். பிறகு பெண்ணிடம் கர்பத்திற்கான காரணத்தை கேட்டதில், அப்பெண்ணுக்கு 2 மாதம் முன்பே வால்பாறை இளைஞருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அதை மறைத்த பெண் வீட்டினர் பொள்ளாச்சி வாலிபருக்கு இளம்பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மேலும் பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க புதுமாப்பிள்ளையின் கையெழுத்தை கேட்டு பெண் வீட்டினர் அவரை மிரட்டியும் உள்ளனர். இதனால் அந்த வாலிபர் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் பெண் வீட்டினரை குறித்து புகார் அளித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!