Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 22 ஜனவரி, 2020

தலை முடியை வெட்ட சொன்னதற்கு தற்கொலையா?அதிர்ச்சி அடைந்த பெற்றோர்!

தலை முடியை வெட்ட சொன்னதற்கு தற்கொலையா?அதிர்ச்சி அடைந்த பெற்றோர்!


சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சிறுவன் ஸ்ரீனிவாசன் ஆவார்.இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பகுதியில் 8 -ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கடந்த மூன்று மாதங்களாக தலைமுடியை வெட்டாமல் வளர்த்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீனிவாசன் தாயார் பலமுறை முடியை வெட்ட சொல்லி கூறியுள்ளார்.அவரின் அப்பா மணியும் முடியை அளவோடு வைத்துக் கொள்ள வற்புறுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஸ்ரீனிவாசனுக்கும் அவரின் தாயாருக்கும் இடையே சண்டை வலுவாக மாறியது.இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய சிறுவன் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்ததும் ஸ்ரீனிவாசன் தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் முடியை வெட்ட சொன்னதற்கு கோபத்தில் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக