Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 8 ஜனவரி, 2020

'சிறுமியின் புகைப்படங்களை தாய்க்கு அனுப்பி மிரட்டல்..! இன்ஸ்டாகிராமில் சேட்டை...

ள்ளி மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த பொறியியல் பட்டதாரியை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் சிறுமிகளையும், பள்ளி மாணவிகளையும் குறி வைத்து ஆபாச மிரட்டல் விடுத்து வந்த பொறியியல் பட்டதாரியை, லாவகமாக திட்டம் தீட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வரும் சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது தாய் வைத்திருக்கும் ஆண்டிராய்டு போனில் தனக்கென்று இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி, கிடைக்கும் நேரங்களில் புது புது புகைப்படங்களை எடுத்து அதில் பதிவிட்டு வந்துள்ளார் சிறுமி.

தன்னுடைய புகைப்படங்களுக்கு லைக்குகள் வர வர பரவசம் அடைந்த சிறுமி, தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் பொழுதை கழித்துள்ளார். இந்த நிலையில் சந்துரு என்ற வாலிபர் சிறுமியின் நண்பர் பட்டியலில் இணைந்து, சிறுமி போடும் போட்டோக்களை புகழ்ந்து பேசி வந்துள்ளார். இதையடுத்து இருவரும் சாட்டிங்கில் பேசி வந்தனர்.

நெருக்கம் அதிகமாக இருவரும் செல்போன் எண்களையும் பகிர்ந்துள்ளனர். தனக்கு நடக்க இருக்கும் விபரீதத்தை அறியாமல் இருந்த சிறுமி, தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களையும் சந்துருவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதை பயன்படுத்திக்கொண்ட சந்துரு, பள்ளிக்கு செல்வது போல கிளம்பி கோயம்பேடு வந்து விடு, நாம் இருவரும் எங்கையாவது சென்று வருவோம் என கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் சரி என்று சொன்ன சிறுமிக்கு, அடுத்தடுத்து சந்துரு பேசிய வார்த்தைகளில் சந்தேகம் இருந்ததால் அதற்கு மறுத்துள்ளார். இதையடுத்து சிறுமியை தொடர்பு கொண்ட சந்துரு, எனக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்து விடு இல்லையேல் உன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்கள் இன்டர்நெட்டில் கசிந்து விடும் என்று மிரட்டினார்.

இருப்பினும் இந்த சம்பவத்தை குறித்து சிறுமி தன்னுடைய தாயிடம் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுமியின் புகைப்படங்களை அவரது தாய் செல்போனுக்கு அனுப்பி வைத்த சந்துரு, 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார். பின்னர் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் வண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

இதையடுத்து எஸ். ஐ. தலைமையிலான டீம் சிறுமியின் தாய் மூலம் சந்துருவுக்கு பணம் கொடுப்பதாக ஒரு இடத்திற்கு வரவழைத்து கைது செய்தது. பின்னர் சந்துருவிடம் இருந்த செல்போன், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், வாலிபர் பெயர் சாய் என்கிற ராஜசிவா சுந்தர் எனவும், அவர் விருதுநகர் மாவட்டம் பள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் எனவும் தெரிந்தது. மேலும் அவர் இதுபோல 12 சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!