>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 15 பிப்ரவரி, 2020

    கொவிட்-19 : 11,053 பேருக்கு மோசமான நிலை.! 8,096 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்.!

    கொவிட்-19 : 11,053 பேருக்கு மோசமான நிலை.! 8,096 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்.!



    லக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொரோனா (கொவிட்-19) வைரஸ், சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. இந்த வைரஸை முதலில் கண்டறிந்த டாக்டர் லி அதே வைரஸ் ஏற்பட்டு பலியானது, மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனா வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது.

    இந்நிலையில், சீனாவில் கொவிட்-19 வைரசால் நேற்று (வெள்ளிக்கிழமை) வரை பலியின் எண்ணிக்கை 1,523-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 66,492 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் நேற்று மட்டும் 143 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர். 

    அதுமட்டுமல்ல புதிதாக 2,641 பேருக்கு இந்த வைரஸ் தாக்கிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. மேலும் 11,053 நோயாளிகள் மோசமான நிலையில் உள்ளனர் என்றும், 8,096 பேருக்கு குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என தகவல் வந்துள்ளது.

    இதனிடையே, கொரோனா (கொவிட்-19) வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையில் பக்க பலமாக இருந்து வந்த மருத்துவ ஊழியர்கள் 6 பேர் பலியாகி இருக்கிறார்கள், அது மட்டுமல்ல மேலும் 1,716 சுகாதார ஊழியர்களுக்கு இந்த வைரஸ் தாக்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதில், 1,102 பேர் உகான் நகரை சேர்ந்தவர்கள், 400 பேர் ஹூபெய் மாகாணத்தின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் என்ற தகவலை தேசிய சுகாதார ஆணையத்தின் துணை மந்திரி ஜெங் யிக்சின் வெளியிட்டுள்ளார் என குறிப்பிடப்படுகிறது.
     

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக