Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 3 பிப்ரவரி, 2020

கணினியை தாக்கி செயலிலக்க வைக்கும் கொரோனா வைரஸ்… புதிய அவதாரத்தால் உலக மக்கள் உச்ச கட்ட குழப்பம்…

கணினியை தாக்கி செயலிலக்க வைக்கும் கொரோனா வைரஸ்… புதிய அவதாரத்தால் உலக மக்கள் உச்ச கட்ட குழப்பம்…


 சீனாவில் மனித உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கும்  கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் தற்போது வெகுவேகமாக பரவி வருகிறது. அந்த வைரஸ் வேகமாக  பரவக்கூடாது என்பதில் அனைத்து  நாடுகளும்  தீவிரமாக  முயற்ச்சி  எடுத்து வருகின்றன. 

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமின்றி  கணினிகளையும் தாக்கும் என்று பொறியியல் வல்லுநர்கள்  புதிய தகவல்களை தெரிவித்து உள்ளனர். 

இது தொடர்பாக கஸ் பெர்ஸ்கை ஆன்டிவைரஸ் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள், கணினிகளில்  உள்ள கோப்புகளில் தங்கி தீங்கிழைக்கும் கொரோனா வைரசை இவர்கள் தற்போது கண்டுபிடித்து உள்ளனர்.
Related image
இது
  • பி.டி.எப்.,
  • எம்.பி.4
  •  டாக்மென்ட் பைல்களை தாக்கி இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது, கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்லாமல் கணினிகளையும் தாக்குகிறது. ஆனால் இந்த வைரஸ்களை ஏற்கனவே சைபர் கிரிமினல்கள் பயன்படுத்தி உள்ளனர். தற்போது வரை நாங்கள் 10 வைரஸ் பைல்களை பார்த்துள்ளோம். இந்த கொரோனா வைரஸ் பைல்கள் வளரும் தன்மை கொண்டதாக இருக்கலாம் என்று கருதுகிறோம் மேலும், இந்த கொரோனா வைரஸ் போலியான கோப்புகள்  மூலம் மறைந்து பரவும் என்றனர். ஏற்கனவே மனிதர்களை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்திவரும் இந்த கொரோனா வைரஸ் தற்போது ஒரு புதிய தலைவலியாக கணினியில் தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!