சமூகத்தை மேம்படுத்த தன்னால் முடிந்த
அனைத்தையும் செய்யும் முயற்சியில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தற்போது
களமிறங்கியுள்ளார்.
ஆம்., பாரத் கே வீரை ஆதரிப்பதில்
இருந்து, அவசர காலங்களில் அவரது மிஷன் மங்கல் இயக்குனர் ஜெகன் சக்தியின் மருத்துவ
கட்டணங்களை கவனித்துக்கொள்வது வரை, அவர் எப்போதும் தன்னால் முடித்த சிலவற்றை
செய்து வந்துள்ளார். அந்த வகையில் தற்போது மீண்டும், அவர் மற்றொரு நல்ல முயற்சியை
ஆதரிக்க முன்வந்தார்.
இதுதொடர்பான தகவலை நடன இயக்குனர் ராகவா
லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தின் வாயிலாக உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த
பதிவில் அவர் குறிப்பிடுகையில்., "இந்தியாவின் முதன் முறையாக திருநங்கைக்கு
வீடு கட்டி தர சுமார் 1.5 கோடி ரூபாயினை நன்கைடுயாக அளிக்க நடிகர் அக்ஷய் குமார்
முன்வந்துள்ளார். திருநங்கை சமூகத்திற்கு உதவ தனது முன்முயற்சியை
வெளிப்படுத்தியுள்ளா" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும்
குறிப்பிடுகையில்., “எனது காஞ்சனா திரைப்படத்தை உருவாக்கும் போது, நான்
திருநங்கைகளை சந்தித்தேன், அவர்களின் வலிமிகுந்த கதைகளைக் கேட்டேன், அவர்கள்
எப்படி திடீரென்று அனாதையாக மாறினர், கடவுள் அவர்களை எப்படி உருவாக்கினார் என்பது
என பல விஷயங்களை அறிந்துக்கொண்டேன். அதன்போது அவர்கள் ரயில் நிலையங்களில் (மற்றும்
பிற சீரற்ற இடங்களில்) தூங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதையும்
அறிந்துக்கொண்டேன்.
அவர்களுக்கான ஒரு தங்குமிடம் குறித்து
சிந்தித்தபோது, சென்னையில் எனது
சொந்த இடத்தில் ஒரு நிலத்தை வாங்கினேன், இதுகுறித்து ஒரு நாள் அக்ஷய் ஐயாவிடம்
விளக்கிக் கொண்டிருந்தேன், அவர் திடீரென்று 'நான் இந்த கட்டிடத்தை கட்டலாமா?'
என்று கேட்டார். நான் அதிர்ச்சியடைந்தேன், ஏனென்றால் நாங்கள் பெரிய மனிதர்கள்
சிலரிடம் சென்று நிதி திரட்ட திட்டமிட்டிருந்தோம், ஆனால் அக்ஷய் குமார் அவர்கள்
தானாக முன்வந்து இந்த கட்டிடத்தை கட்ட உதவி அளித்தார்" என
குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு மற்றும் முன்முயற்சியை
LGBTQI+ ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து கௌரி சாவந்த் குறிப்பிடுகையில்.,
“இது ஒரு நல்ல முயற்சி, யாராவது சமூகத்திற்காக பணத்தை நன்கொடையாக வழங்கினால். (அக்ஷய்
போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள்) இதை ஆதரிப்பது சமூகத்தின் தேவை. நாம் விலங்கு
(நலன்புரி) க்காக உழைக்கிறோம், ஏன் திருநங்கைகளுக்கா அல்ல? அவர்களும் மனிதர்கள்
தானே, அவர்களின் பாலியல் அடையாளம் மட்டுமே வேறுபட்டது. நான் கூட பாலியல்
தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ஒரு வீட்டைக் கட்டுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக