Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 6 மார்ச், 2020

திருச்சியில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ்.. 29 பேர் இந்தியாவில் பாதிப்பு.. வெளியான தகவல்!



லகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் இதுவரை 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மேல் வைரஸ் பரவியுள்ளது. இந்த நோய்க்கு 89 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவில் 3000-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். இந்த நிலையில் இந்த நோய் இந்தியாவுக்கும் பரவி வருகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் கூறுகையில் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என கூறியுள்ளார்.

மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்களில் வந்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதில் 11 மாத குழந்தை உட்பட 4 பேருக்கு இருமல், சளி, காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.


இதையடுத்து, 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுவரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்கள் வழியாக தமிழகத்திற்கு வந்த 96,729 பேர் சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 1,292 பேர் வீடுகளில் இருந்தே கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக