Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 25 மார்ச், 2020

கொரோனா சிகிச்சைக்காக 6 மாத ஊதியத்தை அளித்தார் பிரபல மல்யுத்த வீரர்...


மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா திங்களன்று தனது ஆறு மாத சம்பளத்தை ஹரியானாவின் COVID-19 நிவாரண நிதிக்கு வழங்குவதாக உறுதியளித்தார். இதுதொடர்பான அறிவிப்பை மல்யுத்த வீரர் தனது ட்விட்டர் கணக்கின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 492-ஐ எட்டியுள்ளது மற்றும் வைரஸ் காரணமாக ஒன்பது பேர் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.


ஹரியானாவில் மட்டும் இதுவரை 37 வழக்குகள் பதிவாகியுள்ளளது. இதில் 11 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஹரியானா மாநில கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்யும் விதமாக தனது ஆறு மாத ஊதியத்தை நிதியுதவியாக அளிக்க இருபதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை ஒரு தொற்றுநோயாக மார்ச் 11 அன்று அறிவித்தது. இந்தியாவை பொறுத்தவரையில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா தொற்று தொடர்பான வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வண்ணமே உள்ளது.


விமான நிலையங்களில் இதுவரை 15,24,266 பயணிகள் திரையிடப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா நாட்டில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் 84 என பதிவாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் வழக்கைப் புகாரளித்த கேரள, 99 வழக்குகள் உறுதிப்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!