>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 16 மார்ச், 2020

    கொரோனாவ செக் பண்றாங்களா இல்ல பரப்புறாங்களா?



    கொரோனா பரிசோதனை செய்யும் நாடாளுமன்ற ஊழியர்கள் தெர்மா மீட்டரை கையாளும் முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோய்க்கு 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. கைகளை சுத்தமாக கழுவுதல், மாஸ்க்குகள் போட்டுக் கொள்ளுதல், கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தல், ஒருவருக்கொருவர் சுமார் ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்கள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு அலுவலகங்கள், பள்ளிகள், தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பயோ மெட்ரிக் பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதுதவிர, தொற்று நோய் பாதித்தவர்களுக்கு காய்ச்சலை கண்டறிய தெர்மா மீட்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோயில்கள், அலுவலகங்கள், விமான நிலையங்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இத்தகைய தெர்மா மீட்டர்களை பயன்படுத்தி சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய் பாதித்தவர்களின் உடல் உஷ்ணத்தை கண்டறிய சாதாரண தெர்மா மீட்டர்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவரை தொடாமலே ஒளியை பாய்ச்சி அதன் மூலம் காய்ச்சலை கண்டறியும் அல்ட்ராரெட் டிஜிட்டல் தெர்மாமீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக முறையாக பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
    அந்த வகையில், நாடாளுமன்றத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தெர்மாமீட்டர் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், மனித உடலை தொடாமல் நெற்றிக்கு முன்னர் வைத்து மேற்கொள்ள வேண்டிய பரிசோதனையை அவ்வாறு செய்யாமல் நெற்றியில் வைத்து அழுத்தி ஊழியர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

    இதன்மூலம் யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அவரது நெற்றியை தெர்மா மீட்டர் கொண்டு தொட்டு அதே தெர்மா மீட்டர் மூலம் மற்றொருவரின் நெற்றியை தொடுவதால் அவருக்கும் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முறையான பயிற்கள் இல்லாமல் கொரோனா பரிசோதனை செய்யும் நாடாளுமன்ற ஊழியர்கள் தெர்மா மீட்டரை கையாளும் முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக