Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 20 மார்ச், 2020

ஒலிம்பிக்: விளையாட்டு வீரர்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை!


ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை
லிம்பிக் விளையாட்டு வீரர்களின் நலனை காட்டிலும் வேறு எந்த பிரச்சினையும் தற்போது முக்கியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டும், சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகின்றனர். மேலும், மார்ச் 22ஆம் தேதியன்று மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே இருந்து ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.


இந்நிலையில், இந்திய விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு கருதி பிசிசிஐ, சர்வதேச ஒலிம்பிக் குழு, தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் ஆகியவற்றுக்கு மத்திய அரசு புதிதாக அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது. இந்த அமைப்புகளின் தலைவர்கள், பொதுச் செயலாளர்களுக்கு மத்திய அரசின் துணைச் செயலாளர் எஸ்.பி.எஸ்.தோமர் அனுப்பியுள்ள கடிதத்தில், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி வரையில் விளையாட்டுப் போட்டிகள், தேர்வுப் போட்டிகள் உட்பட எவ்வித நிகழ்வுகளையும் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தேசிய பயிற்சி முகாம்கள் மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில், 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்காக பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களை வெளியாட்களுடன் தொடர்புகொள்ள அனுமதிக்கக்கூடாது எனவும், விதிமுறைகளை பின்பற்றாமல் பயிற்சி முகாமில் இல்லாத பயிற்சியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், விளையாட்டு வீரர்களுடன் தொடர்புகொள்ள அனுமதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



டெல்லியிலுள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கிச்சூடு பயிற்சி முகாமில் ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியை நிறுத்திவைப்பதாக தேசிய துப்பாக்கி சங்கம் முடிவெடுத்திருப்பதைத் தொடர்ந்து மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து நேற்று (மார்ச் 19) மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், “வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் வீரர்கள் இங்கு கொரோனா ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு வந்தால், விதிமுறைகளின்படி தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.



இந்த சூழலில் ஒலிம்பிக் போட்டி குறித்து யாரும் கேள்வியெழுப்பக்கூடாது. அடுத்த மூன்று மாதங்களில் நிலைமை என்னவாக இருக்கும் என யாருக்கும் தெரியாது. சூழல் வரும்போது சர்வதேச அமைப்புகள், அரசுகளின் உத்தரவின் அடிப்படையில் செயல்பட வேண்டும். தற்போதைய நிலையில், விளையாட்டு வீரர்களின் நலனை விட வேறு எதுவும் முக்கியமில்லை” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!