Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

5,500-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதமாக்கிய திரிபுரா ஆலங்கட்டி மழை...

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் திரிபுராவில் பொழிந்த ஆலங்கட்டி மழை 5,500-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதமாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது...

திரிபுராவில் பொழிந்த ஆலங்கட்டி மழையால், மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 4,200 பேர் வீடற்றவர்களாய் மாறியுள்ளனர். அதே நேரத்தில் 5,500-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் மற்றும் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை மிக மோசமான பாதிப்புக்குள்ளான செபஹஜலா மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். மற்றும் மாநிலத்தில் ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட மற்ற இரண்டு மாவட்டங்கள் மேற்கு திரிபுரா மற்றும் கோவாய் என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

"செபாஹிஜாலா, மேற்கு திரிபுரா மற்றும் கோவாய் மாவட்டங்கள் ஆகிய மூன்று மாவட்டங்களைத் தாக்கிய ஆலங்கட்டி மழையைத் தொடர்ந்து குறைந்தது 5,500 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 4,200-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்" என்று முதலமைச்சர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,170 குடும்பங்கள் தஞ்சம் புகுந்த செபாஹிஜாலா மாவட்டத்தில் மொத்தம் 12 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களில் 200 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், 5,417 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் காசோலைகளை முதலமைச்சர் ஒப்படைத்தார், மேலும் அதிகாரிகளின் சேதத்தை மதிப்பிட்ட பின்னர் நிர்வாகத்திடமிருந்து கூடுதல் உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

இதுகுறித்த அறிவிப்பில்., "செபாஹிஜாலா மாவட்டத்தின் பைத்யார் டிகியின் கீழ் புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளை இன்று அதிகாரிகள் பார்வையிட்டனர். தரையில் உள்ள உண்மைகளை சரிபார்த்து உள்ளூர் மக்களுடன் உரையாடினர். உடனடி நிதி உதவியை விரிவுபடுத்தினர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் எங்கள் அரசு நிற்கிறது" என்று டெப் ட்வீட் செய்துள்ளார்.

"நாங்கள் ஏற்கனவே COVID-19 க்கு எதிராக போராடும் இந்த முக்கியமான காலகட்டத்தில் அனைவருக்கும் உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக