Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 11 ஏப்ரல், 2020

டிவி ஏன்டா ஆஃப் பண்ணீங்க... 9 நிமிடத்தால் எவ்வளோ லாஸ்??

மோடி அந்த ஒன்பது நிமிடத்தில் தொலைக்காட்சி பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்தது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டி கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு தீபங்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.

இதனையேற்று நாடு முழுவதும் 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் வரை பல இடங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டது. இதனால் அதிகமான மின்சாரம் சேமிக்கப்பட்டதாக தகவல்களும் வெளியானது. 
 
இந்நிலையில் தற்போதைய புது தகவல் என்னவெனில், தொலைக்காட்சி பார்வையாளர்களைக் கணக்கிடும் பார்க் அமைப்பு அந்த ஒன்பது நிமிடத்தில் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கை 60% குறைந்தது என தகவல் வெளியிட்டுள்ளது. 
 
மேலும், இரவு 8.53 முதலே குறைய ஆரம்பித்த இந்த எண்ணிக்கை இரவு 9.30க்குப் பிறகே சகஜ நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது எனவும் குறிப்பிட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக