Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 18 ஏப்ரல், 2020

அன்பு உலகை ஆளும்... குட்டிக்கதை... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

அருண் : ஏன்டா பூனைக்கு காது வழியா பால் கொடுத்த?
குமார் : அதுதான் வாயில்லா பிராணி ஆச்சே...
அருண் : 😏😏
----------------------------------------------------------------
பாண்டி : ஏன் சார் என் பையன அடிச்சீங்க?
ராஜ் : இரயில்க்கு ரெண்டு தண்டவாளம் இருக்கே... எதுக்குன்னு கேட்டா ஒன்னு ஊருக்கு போக... இன்னொன்னு திரும்பி வர்றதுக்குன்னு சொல்றான்...
பாண்டி : 😬😬
----------------------------------------------------------------
வினோத் : எங்க அப்பா பெரிய பயில்வான்... பஸ்-ஐ கையாலையே தள்ளிருவாரு தெரியுமா?
குமார் : இது என்ன பெரிய விஷயம்? எங்க அப்பா பஸ்-ஐ ஊதியே தள்ளிருவாரு...
வினோத் : நெஜமாவா? உங்க அப்பா என்னவா இருக்காரு?
குமார் : ஆமா... எங்க அப்பா பஸ் கண்டக்டர்...
வினோத் : 😂😂
----------------------------------------------------------------
தினேஷ் : டீ கடைக்காரர் பொண்ண கல்யாணம் செஞ்சதுல ஒரு வசதி இருக்குன்னு சொல்றியே... ஏன்?
கணேஷ் : என்னைய அடிக்கிறதுக்கு முன்னாடி லைட்டாவா? இல்ல ஸ்ட்ராங்கா-வான்னு கேட்டுருவா...!
தினேஷ் : 😝😝
----------------------------------------------------------------
உண்மையான வரிகள்...!!
அதிக நேரம் இருக்காது அதிர்ஷ்டம்...

நீண்ட தூரம் வராது சிபாரிசு...

எல்லா பொழுதும் கிட்டாது உதவி...

எப்போதும் ஜெயிக்கும் தன்னம்பிக்கை...

----------------------------------------------------------------
பெரும் சாதனையை செய்ய...!!
பெரும் சாதனையை செய்ய மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும்...

அவை :

ஏளனம்...

எதிர்ப்பு...
----------------------------------------------------------------
அங்கீகாரம்...
ஒரு குட்டிக்கதை... படித்ததில் பிடித்தது...!!
ஒரு நாள் சாவியை பார்த்து சுத்தியல் கேட்டது. உன்னைவிட வலிமைமிக்கவனாக நான் இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டை திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன்.

ஆனால் நீ சீக்கிரம் திறந்துவிடுகிறாயே. அது எப்படி?

அதற்கு சாவி சொன்னது, நீ என்னைவிட பலசாலிதான், அதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

பூட்டை திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன் என்றது.

அன்பு உலகை ஆளும்...!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக