>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 18 ஏப்ரல், 2020

    விலை மதிப்பில்லாதது எது?

    இன்றைய காலக்கட்டத்தில் நாம் முக்கிய மதிப்பு கொடுப்பது பணத்திற்கு மட்டும் தான். பிறகு தான் மற்றவை. பணம் இருந்தால் அனைத்தையும் வெல்லலாம். ஆனால் பெற்றோரின் மனதை வெல்ல முடியுமா?

    நிஜ வாழ்க்கையில் உண்மையானது எது? பெற்றோர்களா? இல்லை பணமா? வாருங்கள் தெரிந்துக் கொள்வோம்.

    ஒரு நாள் மணிகண்டன்; வீட்டில் திருடர்கள் நுழைந்தனர். வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள், மணிகண்டனையும், அவனுடைய பெற்றோரையும் பார்த்து, நகையும், பணமும் எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சீக்கிரம் சொல்லுங்கள். சீக்கிரம் சொல்லவில்லையென்றால் நாங்கள் உங்களை கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். அதற்கு மணிகண்டனின் பெற்றோர், திருடர்களைப் பார்த்து, எங்கள் வீட்டில் நகையோ, பணமோ எதுவும் இல்லை. தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார்கள். அவர்கள் சொன்னதை திருடர்கள் நம்பவில்லை. மணிகண்டனின் பெற்றோரை அடித்துத் துன்புறுத்தினார்கள்.

    அப்போது, திருடர்களைப் பார்த்து பயத்தில் ஒளிந்து கொண்டிருந்த மணிகண்டன்;, தான் ஒளிந்திருந்த இடத்திலிருந்து வெளியே வந்தான். திருடர்களிடம் சென்றான். திருடர்களிடம் என் அப்பா, அம்மாவை துன்புறுத்தாதீர்கள். நான் பணமும், நகையும் இருக்கும் இடத்தை சொல்கிறேன். அந்த பீரோவில் நகைகள் மற்றும் பணம் இருக்கின்றன. அந்த பீரோவின் சாவி கட்டில் படுக்கைக்குக் கீழே இருக்கின்றது என்று மணிகண்டன்; கூறினான். எங்களைப் பார்த்து பயந்து பணம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து விட்டாயா? என்று திருடர்களில் ஒருவன் கேட்டான்.

    அதற்கு மணிகண்டன்;! நான் உங்களைப் பார்த்து பயப்படவில்லை என்றான். அதற்கு அந்த திருடன், எங்களைப் பார்த்துப் பயப்படவில்லையென்றால், நீயும் உன் பெற்றோரைப் போல பணம் இல்லை என்று பொய் சொல்ல வேண்டியதுதானே? எதற்காகப் பணம் இருக்கும் இடத்தைச் சொன்னாய் என்று கேட்டான். அதற்கு மணிகண்டன், என் பெற்றோருக்கு உண்மை மற்றும் பொய் இவைகளின் விலை தெரியாது. எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் உண்மையைச் சொன்னேன் என்று பதில் சொன்னான். அதற்கு அந்தத் திருடன், உண்மை, பொய் இவற்றிற்கு விலை இருக்கிறதா? உண்மைக்கும், பொய்க்கும் விலை இருக்கிறதென்றால், உண்மையின் விலை என்ன? பொய்யின் விலை என்ன? என்று கூறும்படிக் கேட்டான்.

    உடனே மணிகண்டன், என் அம்மா, அப்பாவின் உயிர்தான் உண்மையின் விலை என்றான். சிறிது நகையும், கொஞ்சம் பணமும் பொய்யின் விலை என்றான். நகையையும், பணத்தையும் மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும். ஆனால், என் அப்பா, அம்மாவின் உயிர் விலை மதிப்பில்லாதது. அவர்களின் உயிர் பிரிந்து போய்விட்டால் மீண்டும் அவர்களின் உயிரைப் பெற முடியாது என்று பதில் சொன்னான். மணிகண்டனின் பதில் திருடர்களைச் சிந்திக்க வைத்தது. சிறிது நேரம் மௌனமாக இருந்தவர்கள், மணிகண்டனின் அழகானப் பேச்சால் கவரப்பட்டு, மனம் மாறி அவர்கள் கொள்ளையடித்தப் பொருட்களை அங்கேயே வைத்துவிட்டு சென்று விட்டார்கள்.

    நீதி :

    இவ்வுலகில் விலை மதிப்பில்லாதது அம்மா அப்பா. நாம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்களின் பாசத்தை அன்பையும் விலை கொடுத்து வாங்கிவிட முடியாது. நமக்கு வரும் எந்த கஷ்டமான சூழ்நிலையிலும் நம் பெற்றோரை விட்டு கொடுக்க கூடாது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக