Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஏப்ரல், 2020

பம்பர விளையாட்டு

ஞாபகம் வருதே...!

🌀இன்றைய நாகரீக உலகத்தில் நம் குழந்தைகளுக்கு கற்றுத்தர மறந்த விளையாட்டுகளில் ஒன்று பம்பரம். நம்முடைய குழந்தை பருவத்தில் பம்பர விளையாட்டை விளையாடாதவர்களே இருக்க மாட்டார்கள். எனவே, இன்று நாம் அந்த விளையாட்டை எவ்வாறு விளையாடலாம்? என்பதை பற்றி காண்போம்.



பம்பர விளையாட்டு :



🌀பம்பரத்தை வைத்து பலவிதமாக விளையாடப்படுகிறது. அதில் நாம் இன்று ஒரு வகை சுவாரஸ்யமான ஆட்டத்தை காணலாம்.



🌀முதலில் பம்பரக்கட்டை மற்றும் சாட்டையை கொண்டு இந்த விளையாட்டை தொடங்க வேண்டும். இரண்டு (அல்லது) பல பேர் இணைந்து இந்த விளையாட்டை விளையாடலாம்.



🌀உதாரணத்திற்கு ஐந்து பேர் சேர்ந்து விளையாடும் பொழுது, அனைவரும் பம்பரத்தை சாட்டையை கொண்டு சுற்றி ஒரே நேரத்தில் கீழே விட வேண்டும்.



🌀கீழே விட்ட பம்பரம் சுழன்று கொண்டு இருக்கும், அந்த சமயத்தில் பம்பரத்தின் சாட்டையை கொண்டு பம்பரத்தை கையில் எடுக்க வேண்டும். இப்போட்டியில் கடைசியாக பம்பரத்தை எடுப்பவர், அவருடைய பம்பரத்தை ஒரு வட்டமிட்டு தரையில் வைக்க வேண்டும்.



🌀மீதி உள்ளவர்கள் தங்களின் பம்பரத்தை மீண்டும் சுழற்றி விட்டு வட்டத்தில் உள்ள பம்பரத்தை தன்னுடைய பம்பரத்தால் வெளியில் எடுக்க முயற்சிக்க வேண்டும்.



🌀இதேப்போல் இந்த விளையாட்டை தொடந்து விளையாடலாம். இப்படி விளையாடுவதன் மூலம் கைகள் வலுப்பெறுவதுடன் குழந்தைகளுக்கு இடையில் ஒற்றுமை உணர்வு மேம்படும்.







🌀பம்பரம் விடும் விளையாட்டு தமிழக நாட்டுப்புறங்களில் சிறுவர்களால் பரவலாக விளையாடப்பட்டது. இதில் ஓயாக்கட்டை, உடைத்த-கட்டை, பம்பரக்குத்து என மூன்று வகைகள் இடம்பெற்று இருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக