>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 9 ஏப்ரல், 2020

    பணியிலிருந்த சென்னை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

    உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் வீட்டில் இருக்க சொன்னாலும், காவலர்கள் அனைவருமே ரோட்டில் தான் நிற்கின்றனர். இந்த காவலர்களுக்கு சரியான பாதுகாப்பு மறைவிடம் கிடைப்பதில்லை.

    மக்களுக்காக தன்னலம் மறந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தற்போது சென்னை மயிலாப்பூரில் பணியில் இருந்த அருண் காந்தி எனும் இளம் வயது போக்குவரத்துக்கு காவலர் ஒருவர் நேற்று மதியம் 3. 15 மணி அளவில் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து அப்பகுதியில் பெரும் சோகம் நிலவியுள்ளது. இந்நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவலரின் மறைவிற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, ஊரடங்கு காலத்தில் பணியாற்றக்கூடிய காவலர்களுக்கு பணிச்சுமையும் மன அழுத்தம் ஏற்படாத வகையில் தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக