Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 15 ஏப்ரல், 2020

வௌவால்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி: ICMR

கேரளா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு வகை வெளவால் இனங்களில் வெளவால் கொரோனா வைரஸ் (BtCoV) இருப்பதை நாட்டின் உயர்மட்ட மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு (ICMR) இந்தியாவில் முதன்முதலில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.

இருப்பினும், இந்த வெளவால் கொரோனா வைரஸ்கள் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் என்று கூற எந்த ஆதாரமும் ஆராய்ச்சியும் இல்லை என்று ஆய்வில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"வெளவால்கள் இயற்கையானவை என்று கருதப்படுகின்றன, அவற்றில் சில மனித நோய்க்கிருமிகள். இந்தியாவில், நிபா வைரஸுடன் ஸ்டெரோபஸ் மீடியஸ் வெளவால்களின் தொடர்பு கடந்த காலத்தில் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் தோன்றிய கடுமையான கடுமையான சுவாசம் என்று சந்தேகிக்கப்படுகிறது நோய்க்குறி கொரோனா வைரஸ் 2 (SARS-CoV-2) வௌவால்களுடன் அதன் தொடர்பையும் கொண்டுள்ளது ”என்று இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் (IJMR) இல் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம், கேரளா, புதுச்சேரி, இமாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் வௌவாலுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மாநிலங்களில் இருக்கும் வௌவால்களில் இருந்து மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவுமா என்ற சந்தேகம் மக்களிடம் எழலாம். இதுகுறித்த விளக்கத்தையும் மருத்துவக் கழகம் அதன் இதழில் வெளியிட்டுள்ளது.

இது குறித்து பிரக்யா டி யாதவ் கூறுகையில்... வௌவாலில் இருக்கும் வைரஸ்-க்கும், சார்ஸ் COVID-19 என்று அழைக்கப்படும் மனிதனை தாக்கி இருக்கும் வைரஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2018-2019 ஆம் ஆண்டுகளில் கேரளாவில் வௌவால்களுக்கு நிபா வைரஸ் இருந்தது ஆய்வில் தெரிய வந்தது. கேரளா, தமிழகம், இமாசலப்பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து Rousettus and Pteropus என்ற வகையைச் சேர்ந்த வௌவால்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்த ஆய்வில் வௌவாலுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும், வெப்பநிலை மாற்றம், புவியியல் மாற்றங்கள் காரணமாக பறவைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வது சகஜமாகி இருக்கிறது. இதனால், வைரஸ் பரவலுக்கு காரணமாக இருக்கும் வௌவால் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. வௌவால்களிடம் இருந்து மனிதனுக்கு நேரடியாக வைரஸ் தொற்று இருக்கும் போது, வௌவால்களிடம் இருந்து எடுககப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மூலம் நோய்க்கான நிவாரணம் தேடலாம். ஆனால், வௌவாலில் இருந்து வேறு விலங்குகள் அல்லது பறவைகள் மூலம் மனிதனுக்கு பரவும் போது, நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படும்" எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!