Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 23 மே, 2020

11 மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்காது.!

11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிகள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சென்னையில் தொடங்காது என தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

இதன் காரணமாகா வரும் 27ஆம் தேதி முதல் நடந்து முடிந்த 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் தொடங்க இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!