Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 29 மே, 2020

டிக்கெட் முன்பதிவு அவகாசத்தை 4 மாதங்களுக்கு நீட்டிப்பு - ரயில்வே அமைச்சகம்!

ரயிலில் முன்பதிவு  செய்வதற்கான கால அவகாசத்தை 4 மாதங்களுக்கு நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 
கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தற்பொழுது பாதிப்புகள் குறையாத நிலையில், மக்களுக்காக அரசு சில தளர்வுகளை கொண்டு வந்துள்ளது. 
அதன் படி, முன்பதிவு பெற்று ரயில் சேவைகளையும் துவங்கலாம் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இதன் படி முன்பதிவுக்கான கால அவகாசத்தை 4 மாதங்களாக நீடிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. வருகின்ற 1 ஆம் தேதி முதல் நடைமுறை படுத்தப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக