சமீபத்திய தகவல்கள் படி இயக்குனர் AR முருகதாஸ், டிஜிட்டல் தளத்தில் தனது அடுத்த படைப்பினை வெளியிட முடிவு செய்துள்ளார்.
இயக்குனர் AR முருகதாஸின் இயக்கத்தில் இறுதியான வெளியான தர்பார், ஜனவரி 9-ஆம் தேதி பெரிய திரைகளில் வெளிவந்தது, பார்வையாளர்களிடமிருந்து கலவையான பதில்களைப் பெற்றது. சமீபத்திய அறிக்கையின்படி, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் டிஜிட்டல் இடத்திற்குச் செல்லத் தயாராக உள்ளார், ஆனால் ஒரு தயாரிப்பாளராக.
நடிகை வாணி போஜனின் அறிமுகத்தை குறிக்கும் ஒரு வலைத் தொடரை முருகதாஸ் தயாரிக்க இருப்பதாக என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெயரிடப்படாத தொடரை அவரது முந்தைய உதவியாளர்களில் ஒருவர் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது.
பெண்களை மையமாகக் கொண்ட ஒரு த்ரில்லர் எனக் கூறப்படும் இத்தொடரின் முக்கிய பகுதிகள் சென்னையில் படமாக்கப்படும். நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. AR முருகதாஸ் முதல் தயாரிப்பு முயற்சி 2011-ல் வெளியான அவரது உதவியாளர் M சரவணனின் எங்கேயும் எப்போதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் தங்களது பிளாக்பஸ்டர் படமான துப்பாக்கியின் தொடர்ச்சியில் பணியாற்ற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக