Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 22 மே, 2020

குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட சில வீட்டுமுறை வைத்தியம்...

உலகெங்கிலும் உள்ள பிரச்சனைகளை சமாளிக்கும் பலம் நமக்கு இருந்தாலும், துணைவரின் குறட்டை விடும் பிரச்சனையில் இருந்து நம்மாள் தப்பிக்க இயலாது. இந்நிலையில் இந்த குறட்டையில் இருந்து நாம் எப்படி தப்பிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

குறட்டை விடுவது ஆரோக்கியத்திற்கு ஒரு நல்ல அறிகுறி அல்ல. உண்மையில், மக்கள் பெரும்பாலும் அவற்றிலிருந்து விடுபட பல்வேறு வகையான முயற்சிகளைச் செய்கிறார்கள், ஆனால் குறட்டையிலிருந்து நிவாரணம் பெற மக்கள் வீட்டு வைத்தியத்தை முயற்சிப்பதில்லை. 

உண்மையில் வீட்டு வைத்திய முறை குறட்டை பிரச்சனையில் இருந்து நமக்கு விடிவுகாலம் அளிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் குறட்டையிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான வீட்டு வைத்தியங்களை இன்று நாம் உங்களுடன் பகிர இருக்கிறோம்.

  • தூங்குவதற்கு முன், சில துளிகள் பைப்பர்மிண்ட் எண்ணெயை தண்ணீரில் கலந்து, இதை கொண்டு வாயை கொப்பளிக்கவும். 
  • ஒரு கப் கொதிக்கும் நீரில் 10 புதினா இலைகளை சேர்த்து பின்னர் குளிரும் வரை காத்திருக்கவும். பின்னர், அதை வடிகட்டியோ அல்லது வடிக்கடாமலோ குடிக்கவும். இந்த முறையும் உங்கள் குறட்டையில் இருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
  • ஒரு கிளாஸ் மந்தமான தண்ணீரில் இலவங்கப்பட்டைப் பொடியை கலந்து குடிக்கவும். இதன் மூலமும் உங்கள் குறட்டையில் இருந்து நிவாரணம் பெறுவீர்.
  • தூங்குவதற்கு முன் ஒன்று அல்லது இரண்டு பூண்டு மொட்டுகளை தண்ணீரில் ஊரவைத்து பின்னர் பருகுங்கள். இதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள்.
  • ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்லும் முன் மஞ்சள் பாலில் (மஞ்சள் கலந்த பால்) குடிப்பதால் குறட்டையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
  • இரவில் தூங்குவதற்கு முன் குறைந்தது ஒரு கப் பால் குடிப்பதும் குறட்டை நிறுத்த உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக