Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 8 ஜூன், 2020

கொரோனா சிகிச்சைக்கு 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க முடிவு- சுகாதாரத்துறை!

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என புகார் எழுந்த நிலையில், கூடுதலாக 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோன வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என புகார் எழுந்த நிலையில், சென்னையில் கொரோனா சிகிச்சைகளுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்த கூடுதலாக 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.

அதில் முதற்கட்டமாக, 30 தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!