Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 15 ஜூன், 2020

வாழ்க்கையில் எது அற்புதமானது தெரியுமா? மாத்தி யோசிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------------------
         சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------------------------------------
தினேஷ் : பகல்ல தூங்குனா தொப்பை வருமாம்..
குமார் : அப்போ ராத்திரியில தூங்குனா சிக்ஸ் பேக் வருமா?
தினேஷ் : 😳😳
-------------------------------------------------------------------
நோயாளி : வேகமா ஓடினா மூச்சு பிடிச்சிக்குதே டாக்டர்.
டாக்டர் : அப்ப மெதுவா ஓடுங்க...
நோயாளி : மெதுவா ஓடினா போலீஸ் பிடிக்குதே...
டாக்டர் : 😝😝
-------------------------------------------------------------------
ராம் : பொண்ணு அழுதுக்கிட்டே இருக்கே.. ஏன் மாப்பிள்ளையை பிடிக்கலையா?
சோமு : அதெல்லாம் இல்ல... சீரியல் பாக்குற நேரத்துல பொண்ணு பாக்க வந்துருக்கீங்கல்ல... அதான்..
ராம் : 😐😐
-------------------------------------------------------------------
மாத்தி யோசி... படித்ததில் பிடித்தது...!!
-------------------------------------------------------------------
கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் 'எனக்கு இரண்டு கண்களும் தெரியாது, தயவு செய்து தருமம் பண்ணுங்கள்" என்று எழுதி இருந்தது.

அந்த வழியில் போவோர், வருவோர் எல்லாம் அதை பார்த்து கொண்டே சென்றார்கள், யாரும் தருமம் பண்ணுவது மாதிரி தெரியவில்லை.

ஒரு நபர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் தட்டில் போட்டார். பிறகு அங்கு வைத்து இருந்த போர்டின் பின் பகுதியில் ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.


சிறிது நேரத்தில் அதை படிக்கும் அனைவரும் அவன் தட்டில் சில்லறையை போட ஆரம்பித்தனர். மாலை ஆனதும் அந்த போர்டை எழுதி வைத்தவர் வந்து பார்த்தார். அந்த சிறுவனுக்கு அவர் யார் என்று தெரியாததால் ஐயா... அந்த போர்டில் என்ன எழுதியிருக்கிறது? என்று கேட்டான். அவர் சொன்னார் நீ என்ன எழுதி வைத்தாயோ அதையேதான் நான் வேறு விதத்தில் எழுதி வைத்தேன் என்றார்.

உடனே அந்த சிறுவன் நீங்கள்தான் இதை எழுதி வைத்தீர்களா? என்று கேட்டு அதில் என்ன எழுதி வைத்தீர்கள்? என கேட்டான். அதற்கு அந்த நபர் 'இன்றைய பொழுது நன்றாக விடிந்துள்ளது. ஆனால் என்னால்தான் அந்த அற்புதத்தை பார்க்க முடியவில்லை"
என்று அந்த போர்டில் எழுதினேன் என்றார்.

இந்த வாசகத்தை படித்த அனைவரும் உனக்கு கண் தெரியாது என்பதைவிட நல்ல வேளை நமக்கு கண் இருக்கிறது. நம்மால் எல்லாவற்றையும் கண்டு ரசிக்க முடிகின்றது என்று உனக்கு தருமம் செய்து விட்டு செல்கிறார்கள் என்று சொன்னார்.

வாழ்க்கையில் அற்புதமானது எதுவென்றால் ஒருவன் மனம் விட்டு சிரிப்பது, அவன் சிரிப்பிற்கு காரணம் நீ தான் என்றால் அது அதைவிட அற்புதமானது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக