>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 30 ஜூன், 2020

    ‘அது எங்களோட இடம்’... பூட்டானிடம் வம்பிழுக்கும் சீனா!

    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நிலவி வரும் நிலையில், இந்திய எல்லைக்குள் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் தனக்கும் உரிமை இருப்பதாக சீனா கடந்த சில வாரங்களாக பிரச்சினை செய்து வருகிறது. எனினும், கல்வான் பள்ளத்தாக்கு இந்திய எல்லைக்குள்தான் இருப்பதாக இந்திய தரப்பு விளக்கமளித்தது.

    இதேபோல சீனா தன்னைச் சுற்றி இருக்கும் அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச்சினையை உருவாக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பூட்டானை வம்பிழுத்துள்ளது சீனா. உலக சுற்றுச்சூழல் ஆதரவுக் குழுவின் 58ஆவது கூட்டத்தில், பூட்டானில் இருக்கும் சக்தெங் வனவிலங்கு சரணாலயத்திற்கு நிதியுதவி அளிக்க முன்மொழியப்பட்டது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சக்தெங் வனவிலங்கு சரணாலயம் இருக்கும் இடம் எல்லைப் பிரச்சினைக்கு உட்பட்டது என சீனா தெரிவித்துள்ளது. பூட்டானுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லை இன்னும் முழுவதுமாக நிர்ணயம் செய்யப்படவில்லை. எனினும், சக்தெங் வனவிலங்கு சரணாலயம் எந்த நாட்டின் எல்லைக்குள் இருக்கிறது என இத்தனை நாட்களாக எந்தப் பிரச்சினையும் இல்லை.

    தற்போது சீனா புதிய பிரச்சினையை கிளப்பியுள்ள நிலையில், சக்தெங் வனவிலங்கு சரணாலயம் பூட்டானின் இறையாண்மை எல்லைக்குள் இருப்பதாக பூட்டான் அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. சக்தெங் வனவிலங்கு சரணாலயத்திற்கு இதுவரை எந்தவொரு சர்வதேச நிதியுதவியும் வழங்கப்படவில்லை. ஆக, முதல்முறையாக சர்வதேச நிதியுதவிக்கு முன்மொழியப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சீனா புதிய எல்லைப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.

    இக்கூட்டத்தில் சீனாவுக்கு நேரடி பிரதிநிதி இருந்தாலும், பூட்டானுக்கான பிரதிநிதி இல்லை. ஆகவே பூட்டானின் பிரதிநிதியாக இந்திய ஐஏஎஸ் அதிகாரி அபர்ணா சுப்ரமணி வாதிட்டார். சக்தெங் சரணாலய விவகாரத்தில் சீனா எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பூட்டானின் நிலைப்பாட்டை கேட்காமல் முடிவுக்கு வரக்கூடாது என அபர்ணா சுப்ரமணி தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, அபர்ணா சுப்ரமணிக்கு பூட்டான் அரசு அனுப்பிய குறிப்பில், “சக்தெங் வனவிலங்கு சரணாலயம் பூட்டானின் இறையாண்மை எல்லைக்கு உட்பட்ட பகுதி” என உறுதிபட தெரிவித்தது. சீனாவின் எல்லை உரிமைகோரலை பூட்டான் மறுத்ததை தொடர்ந்து சக்தெங் வனவிலங்கு சரணாலயத்திற்கு நிதியுதவி அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக