Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 4 ஜூன், 2020

சிறுத்தையின் ஏமாற்றம்

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு கறுப்பு மானையும், ஒரு புள்ளி மானையும் பார்த்து, மலையடிவாரத்திற்குச் சென்றது. பின், எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யும் நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்திற்கு வந்து வௌ;வேறு பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. எதைத் துரத்தலாம் என்று யோசித்து பிறகு, கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும் என்று கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போனது. உடனே சிறுத்தை அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. புள்ளி மானைப் பிடிக்கலாம் என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமானும் வேகமாக ஓடிப் போனது. இரண்டையும் பிடிக்கமுடியாமல் சோர்ந்துபோன சிறுத்தை, பசி மயக்கத்தில் மயங்கி விழுந்தது.

நீதி :

பேராசை பெரு நஷ்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!