Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 23 ஜூன், 2020

சீனாவிலிருந்து வாங்க வேண்டாம்... இந்தியாவுக்கு அட்வைஸ்!

 

சீன இறக்குமதியைக் குறைக்க என்ன செய்யலாம்?
samayam tamil
இந்தியா தனது எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான இறக்குமதியை சீனா தவிர்த்து மற்ற நாடுகளில் மேற்கொள்ளலாம் என்று உலக வர்த்தக மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா - சீனா மோதல்!

இந்திய - சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைத் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன வீரர்கள் 40 பேருக்கு மேல் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் நிலவும் இப்பிரச்சினை வர்த்தகப் போருக்கு வழிவகுத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் வர்த்தக ரீதியாக சீனாவை அதிகமாகச் சார்ந்திருக்கிறது. அங்கிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் ஏராளம். சீனப் பொருட்களைப் புறக்கணிக்க நாடு முழுவதும் கொந்தளிப்பு எழுந்துள்ளது. இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சீனா மட்டுமல்லாமல் உலகின் மற்ற நாடுகளில் இருந்தும் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சீனாவை நம்பி வாழும் இந்தியா!

சீனாவுக்கு எதிரான மனநிலை இந்தியாவில் பரவலாக இருந்தாலும் இந்தியச் சந்தையில் சீனாவின் கரம் இன்னும் வலுவாகவே இருக்கிறது. அண்டை நாடான சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைப் பட்டியலிட முடியாத அளவுக்கு அங்கிருந்து அதிகளவு பொருட்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. குறிப்பாக எலெக்ட்ரானிக் பொருட்கள் சீனாவிலிருந்து அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்திய எலெக்ட்ரானிக் பொருட்கள் சந்தையில் கடந்த ஆண்டில் ரூ.1.4 லட்சம் கோடிக்கு சீன தயாரிப்புகள் விற்பனையாகியுள்ளன. ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், லேப்டாப்கள், பிராண்டட் பொருட்கள், வாட்ச் எனப் பல்வேறு சீனத் தயாரிப்புகள் இந்தியச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிப்பு

சீனப் பொருட்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துவதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். எலெக்ட்ரானிக் சந்தையில் சீனப் பொருட்களின் ஆதிக்கத்தால் மைக்ரோமேக்ஸ், லாவா, இண்டெக்ஸ், கார்பன் போன்ற உள்நாட்டுத் தயாரிப்புகள் விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ளன. கடந்த ஆண்டு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன பிராண்டுகளின் பங்கு மட்டுமே 71 சதவீதமாக இருந்துள்ளது. எலெக்ட்ரானிக் சந்தை மட்டுமல்லாமல், மருந்துகள், ரசாயனம், ஜவுளி, பட்டாசுகள், ஆட்டோமொபைல் பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் சீனத் தயாரிப்புகள் இந்தியச் சந்தையை ஆட்டிப் படைக்கின்றன.

தீர்வுதான் என்ன?

சீனாவை அதிகமாகச் சார்ந்திருக்கும் இந்தியாவுக்கு உலக வர்த்தக அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளது. சீனாவுக்குப் பதிலாக சிங்கப்பூர், தைவான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எலெக்ட்ரானிக் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யலாம் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 90 சதவீதம் அளவுப் பொருட்கள் சீனாவைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. அதேபோல எண்ணெய் அல்லாத இதர வணிகப் பொருட்கள் இறக்குமதியில் சீனாவின் பங்கு மட்டுமே 14 சதவீதமாக இருக்கிறது. சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் மொத்த பொருட்களில் எலெக்ட்ரானிக் பொருட்கள் மட்டும் 32 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன. எனவே எலெக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதியைக் குறைத்தாலே சீனாவை அதிகமாகச் சார்ந்திருக்கும் இந்தியாவின் நிலை சற்று மாறும் என்று கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!