Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 7 ஜூலை, 2020

திருச்சி அருகே 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி எரித்து கொலை..!

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி. இவரின் 14 வயது மகள், நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்டநேரமாகியும் அவள் வீட்டிற்கு வரத்தால், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவளை தேடி வந்தனர்.

அப்பொழுது ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்ளுக்காட்டில் அந்த சிறுமி எறிந்த நிலையில் மீட்கப்பட்டார். இதனை அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் விரைந்தார்.

இந்த கொலைக்கான தடயங்கள் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இது திட்டமிட்டு நடந்த கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!