Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஜூலை, 2020

கூகுள் CEO சுந்தர் பிச்சை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!


samayam tamil 
சுருக்கமான வரலாறு
  • பிறந்த நாள்: 12 ஜூலை 1972.
  • தேசியம்: அமெரிக்கன், இந்தியன்.
  • பிரபலம்: கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி.
  • வயது: 48.
  • பிறந்த நாடு: இந்தியா.
  • பிறந்த ஊர்: மதுரை.
  • உயரம்: 1.80 மீ.
குடும்பம்
  • மனைவி: அஞ்சலி பிச்சை.
  • தந்தை: ரெகுநாத பிச்சை.
  • தாய்: லெட்சுமி பிச்சை.
சுந்தர் பிச்சை ஒரு கணினி பொறியாளர் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாகி ஆவார். இணையம் தொடர்பான சேவைகளில் புகழ்பெற்ற நிறுவனமான கூகுள் 2015 ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து கூகுள் தனது தாய் நிறுவனமான ஆல்பாபெட் இன்க் நிறுவனத்திடம் தொடங்கப்பட்டது. அதன் தலைமை அதிகாரியாக லாரி பேஜ்ஜும் பிரசின்டென்டாக செர்ஜி பிரினும் நியமிக்கப்பட்டனர்.

அப்போது கூகுளின் தயாரிப்பு மற்றும் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த சுந்தர் பிச்சை பின்பு கூகுளின் புதிய நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். பிச்சை பல ஆண்டுகளுக்கு முன்பு கூகுளில் தயாரிப்பு மேலாளராக வேலைக்கு சேர்ந்தார்.

புதுமையான முயற்சிகள்:

அவர் பல புதுமையான முயற்சிகளை தனது தலைமையின் கீழ் மேற்க்கொண்டார். அப்படி அவர் தலைமை தாங்கியவற்றில் கூகுள் குரோம் மற்றும் குரோம் ஓ எஸ் உள்ளிட்ட கூகுளின் சில தயாரிப்புகள் நல்ல வெற்றியை கண்டன. 

அதன் பிறகு ஜீ மெயில் மற்றும் கூகுள் டாக்ஸ் போன்ற பிற கூகுளின் தயாரிப்புகளின் நிர்வாக பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார். பிச்சை சிறு வயது முதலே ஆக்கபூர்வமானவராக இருந்தார். அவர் கூகுளில் பணிப்புரிவதற்கு முன்பு மெக்கன்ஸி என்னும் நிறுவனத்தில் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார். அவர் மிகவும் பிரபலமான கல்வி மையங்களில் தனது கல்வியை பெற்றார்.

பிச்சையை அவரது நண்பர்கள் அனைவருக்கும் பிடிக்குமாம். மேலும் “கூகுளின் மிக முக்கிய தயாரிப்புகளுக்கு பின்னால் உள்ள முக்கியமான மனிதர்” என்று அழைக்கப்படுகிறார் சுந்தர் பிச்சை.

குழந்தை பருவமும், ஆரம்ப வாழ்க்கையும்:

பிச்சை சுந்தர் ராஜன் 12 ஜூலை 1972 அன்று இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பிறந்தார். அவரது தந்தை ரகுநாதா பிச்சை பிரிட்டிஷ் கூட்டு நிறுவனமான ஜி.இ.சியின் மின் பொறியியலாளராக பணியாற்றினார். அவரது தாயார் குழந்தைகளை பெறுவதற்கு முன்பு சுருக்கெழுத்தாளராக பணிப்புரிந்துள்ளார். 

பிச்சை ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே அவர் சிறந்த மாணவராக விளங்கினார். அவர் பத்மா சேஷாத்ரி பாலா பவனில் கல்வி பயின்றார். பிறகு அவர் கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிப்புரிந்தனர். அது இந்தியாவில் உள்ள முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாகும்.

அவர் கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி யில் பி.டெக் படித்தார். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் அறிவியல் மற்றும் இயற்பியலில் பட்டம் பெற்றார்.

வேலை:

அவர் பி.எச்.டி முடிக்க முடிவெடுத்தார். அதற்காக அவர் ஸ்டான்போர்டில் தனது கல்வி வாழ்க்கையை துவங்கினார். பிறகு ஸ்டான் போர்டில் இருந்து வெளியேறிய பிச்சை சிலிக்கான் வேலியில் உள்ள செமி கண்டக்டர் தயாரிப்பு நிறுவனத்தில் பொறியாளராகவும் தயாரிப்பு மேலாளராகவும் சேர்ந்தார். அங்கும் அவர் நீண்ட காலம் வேலை பார்க்கவில்லை. 

அவர் 2004 இல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். ஆரம்பத்தில் ஒரு சிறிய குழுவில் கூகுளின் தேடல் பகுதியில் வேலை பார்த்தார். பிறகு கூகுள் தனது சொந்த உலாவியை (Browser) உருவாக்கும் பொறுப்பை பிச்சைக்கு அளித்தது.

எதிர்ப்பும், வெற்றியும்:

அவர் மூத்த ஊழியர்களுடன் தனது யோசனை குறித்து விவாதித்தார். அப்போதைய தலைமை நிர்வாகியாக எரிக் ஷ்மிட்டன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு உலாவியை உருவாக்குவது மிகவும் விலையுயர்ந்த விவகாரம் என அவர் நினைத்தார். 

இருப்பினும் கூகுளின் உலாவியை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தார் பிச்சை. இதற்காக அவர் கூகுள் ஊழியர்களை சமாதானப்படுத்தினார். இறுதியில் 2008 ஆம் ஆண்டு கூகுள் குரோம் என்ற இணைய உலாவி வெளியிடப்பட்டது.

முக்கிய பங்கு:

கூகுள் க்ரோம் வெற்றியில் சுந்தர் பிச்சைக்கு முக்கிய பங்கு இருந்தது. பயனர்கள் நேரடியாக கூகுளில் தேடுவதற்கு அந்த உலாவி உதவியது. இதனால் கூகுள் குரோம் நல்ல வெற்றியை கண்டது. 

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் ஃபயர் ஃபாக்ஸ் போன்ற போட்டி உலாவி நிறுவனங்களை மிஞ்சி குரோம் தனித்துவமான வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து பிச்சை சர்வதேச அளவில் அறியப்பட்டார்.
அதன் பிறகு குரோம் ஓ.எஸ், குரோம் புக்ஸ் மற்றும் குரோம் கேஸ்ட் போன்ற முக்கியமான தயாரிப்புகளுக்கு குரோம் வழிவகுத்தது.

பதவி உயர்வு:

2008 ஆம் ஆண்டு பிச்சை தயாரிப்பு மேம்பாட்டு துணை தலைவராக பதவி உயர்வு பெற்றார். இதன் பிறகு கூகுள் குறித்த விளக்க காட்சிகளில் இவர் அடிக்கடி தோன்ற தொடங்கினார். 

மேலும் கூகுளில் தொடர்ந்து அவர் பதவி உயர்வு பெற்று வந்தார். 2012 ஆம் ஆண்டுக்குள் அவர் குரோமின் மூத்த துணை தலைவரானார். அதன் பிறகு 10 ஆகஸ்ட் 2015 அன்று கூகுளின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டார்.

பிப்ரவரி 2016 இல் கூகுளின் நிறுவனமான ஆல்பாபெட்டின் 2,73,328 பங்குகள் சுந்தர் பிச்சையிடம் இருந்தன. இந்த பங்குகளின் மொத்த மதிப்புகள் 199 மில்லியன் டாலர்கள் ஆகும். இந்த பங்குகளின் மதிப்பு 650 மில்லியன் டாலர் வரை உயர்ந்தது.

தனிப்பட்ட வாழ்க்கை & சொத்து விபரம்!

அவர் அஞ்சலி பிச்சை எனும் பெண்ணை மணந்தார். பிச்சைக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுந்தர் பிச்சையின் சொத்தின் நிகர மதிப்பு 1.2 பில்லியன் டாலர் ஆகும். 

சுந்தர் பிச்சை பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்:

  • சுந்தர் பிச்சை ஒரு கிரிக்கெட் ரசிகர் ஆவார். அவர் தனது பள்ளி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார்.
  • அவரது 12 வயது வரை அவரது குடும்பத்தில் யாருமே தொலைபேசி வைத்திருக்கவில்லை.
  • அவர் கூகுளில் சேருவதற்கு முன்பு தனது நண்பரை கூகுளில் பணிப்புரிவது குறித்து பேசினார்.
  • கூகுள் பொதுவான நிறுவனமாக ஆவதற்கு முன்பே பிச்சை கூகுளில் சேர்ந்துவிட்டார்.
  • அவர் எண்களை மனதில் நினைவு வைத்துக்கொள்வதில் வல்லவர். அவர் தனது சிறு வயதில் டயல் செய்த ஒவ்வொரு தொலைபேசி எண்ணையும் நினைவு வைத்திருந்தாராம்.
  • அவர் கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி மாணவர்களுடன் அதிகம் ஸ்கைபில் உரையாடுகிறார்.
  • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு சுந்தர் பிச்சை போட்டியிட்டார். ஆனால் இறுதியில் அந்த பதவி சத்யா நாதெல்லா என்பவருக்கு சென்றது. (சத்யா நாதெல்லாவும் ஒரு இந்தியரே).
  • கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி என்பதால் அவர் மிகவும் மோசமானவர் என பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர் நட்பாக பழக கூடியவராக இருக்கிறார்.
  • அவர் கடந்த சில ஆண்டுகளாக கூகுளின் விழாக்களில் பிச்சை முக்கிய பங்கு வகுக்கிறார்.
  • சில வருடங்களுக்கு முன்பு சுந்தர் பிச்சையை டிவிட்டர் வேலைக்கு அமர்த்த நினைத்ததாகவும் ஆனால் கூகுள் அவருக்கு அதிக சம்பளம் கொடுத்து தக்க வைத்து கொண்டதாகவும் ஒரு வதந்தி பரவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக