Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

இந்தியாவைப் படையெடுக்கும் நிறுவனங்கள்.. கோடி கோடியாய் முதலீடு!


சாம்சங் உள்ளிட்ட 22 நிறுவனங்கள் இந்தியாவில் ஆலை அமைக்க ரூ.11,000 கோடிக்கு மேல் முதலீடு செய்கின்றன.


கடந்த ஆண்டில் சீனாவில் கொரோனா வைரஸ் பிரச்சினை பூதாகரமாக எழுந்த சமயத்தில் சீனாவில் தொழில் புரியும் நிறுவனங்கள் பல அந்நாட்டை விட்டே வெளியேறின. கொரோனா பாதிப்பால் சீனப் பொருளாதாரமே பெரும் வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில் மற்ற நாடுகள் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்ய தயக்கம் காட்டின. சீனாவுக்கு வரும் முதலீடுகளும் குறைந்துபோனது. இதனால், சீனாவை விடுத்து மற்ற நாடுகளில் முதலீடு செய்யத் தொடங்கின. குறிப்பாக, இந்தியாவில் முதலீடு செய்ய நிறுவனங்கள் அதிக ஆர்வமாக உள்ளன.

அதன்படி, இந்தியாவில் மொபைல் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், ஆப்பிள் நிறுவனத்துக்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள் என மொத்தம் 22 நிறுவனங்கள் 1.5 பில்லியன் டாலரை முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன.  
சாம்சங், ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி, விஸ்ட்ரான் கார்ப், பெகட்ரான் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. இந்த முதலீடுகள் மூலமாக இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.11.5 லட்சம் கோடி மதிப்புக்கு செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கப்படவிருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

புதிதாக அமைக்கப்படும் ஆலைகள் மூலமாக, இந்தியாவில் 3 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 9 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தைவான், தென் கொரியா, ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குகின்றன.
இந்தியாவில் மொபைல்போன் உற்பத்தியை தொடங்கும் இந்த நிறுவனங்களுக்காக மத்திய அரசு 41,000 கோடி ரூபாயை உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக ஒதுக்கியுள்ளது. இச்சலுகையைப் பெற 22 நிறுவனங்கள் ஆர்வத்துடன் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாகவும், இந்தியாவின் உற்பத்தி வருவாய் விரைவில் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டும் எனவும் ரவி ஷங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!