Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

சிந்திக்க வைக்கும் குட்டிக்கதை... தேனீயிடம் பறவை அப்படி என்ன கேட்டது? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
----------------------------------------------------------------------------
Student : ஏன் டீச்சர் எனக்கு Mark ரொம்ப கம்மியா போட்டு இருக்கீங்க?
Teacher : உனக்கு தான் எதுக்குமே Answer தெரியாதே...!
Student : உங்களுக்கு தெரியுமா டீச்சர்?
Teacher : ஆமா... அதுக்கு என்ன இப்போ?
Student : ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு பதில் தெரிஞ்சா பத்தாதா டீச்சர்?
Teacher : 😠😠
----------------------------------------------------------------------------
டாக்டர் : ஏங்க நொண்டி நொண்டி வரீங்க?
நோயாளி : கால்ல அடி பட்டுருச்சு டாக்டர்.
டாக்டர் : கூட உங்க மனைவிய கூட்டிக்கிட்டு வந்தா உதவியா இருக்கும்ல?
நோயாளி : கால் வலியே தாங்க முடியல... இதுல தலைவலி வேறையா...
டாக்டர் : 😆😆
----------------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
----------------------------------------------------------------------------
பணத்திற்காக அன்பு வைக்காதே...
அது பாதியிலே விலகிவிடும்.
அழகுக்காக அன்பு வைக்காதே...
அது அர்த்தமின்றி போய்விடும்.
அன்புக்காக அன்பு வை...
அது என்றும் அழியா ஓவியம் போல் நிலைத்திருக்கும்...
வாழ்வில் சாதிக்க வேண்டுமெனில் வேறு எதுவுமே தேவையில்லை.
முழுமையான நம்பிக்கை, தூய்மையான அன்பு, முயற்சி மட்டுமே போதும்.
வாழ்க்கை ஆயிரம் காரணங்களை நீங்கள் அழுவதற்காக தரும்போது,
நீங்கள் புன்னகைக்க பல காரணங்களை வாழ்க்கைக்கு கொடுங்கள்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
----------------------------------------------------------------------------
குட்டிக்கதை.....!
----------------------------------------------------------------------------
ஒரு தேனீயிடம் ஒரு பறவை கேட்டது.

'ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் நீ தேனைத் தயாரிக்கிறாய்.

ஆனால், மனிதன் அந்த தேனை உன்னிடமிருந்து திருடி விடுகிறான்"

அதற்காக நீ வருந்துவதில்லையா?

அதற்கு தேனீ பதிலளித்தது. 'இல்லவே இல்லை..! ஏனென்றால் மனிதன் என்னிடமிருந்து தேனை மட்டும்தான் திருட முடியும்.

ஆனால், தேனை உண்டாக்கும் கலையை ஒருபோதும் அவன் என்னிடமிருந்து திருட முடியாது".

என்ன ஒரு உன்னதமான மனப்பான்மை..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக