>>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

    மனுசன் சாப்பிடுவானா இத.. குப்பை வண்டியில் சாப்பாடு! – கொரோனா நோயாளிகள் போராட்டம்!

    ஈரோடு மாவட்டம் அருகே கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளிக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்தவர்கள், நோய் தொற்று உள்ளவர்கள் பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். செம்புளிச்சாம் பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கொரோனா தொற்று உள்ளதாக 51 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    ஆனால் அந்த பள்ளியில் குடிநீர் வசதி இல்லை, கழிவறையில் தண்ணீர் வருவதில்லை, குப்பைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்துள்ளன. இந்நிலையில் அங்குள்ள நோயாளிகளுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வந்து கொடுத்தது அவர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்து அங்கு விரைந்த பவானி தாசில்தார் அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தருவதாக கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக