Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

கழுதையால் கிடைத்த பாடம்

ஒரு நாள் ராஜாவின் நண்பர் ஒருவர் ராஜாவை பார்க்க அவரது வீட்டிற்கு வந்தார். ராஜா அவர்களே! உங்களுடைய கழுதையை எனக்கு இரண்டு நாட்களுக்கு தயவுசெய்து இரவலாகத் தாருங்கள் இரண்டு நாட்கள். கழிந்ததும் திருப்பி தந்து விடுகிறேன் என்றார் நண்பர்.

அந்த நண்பர் முன்பும் இரண்டொரு தடவை கழுதையை இரவல் வாங்கிச் சென்று கழுதைக்கு சரியான உணவளிக்காமல் பட்டினிப்போட்டிருந்தார். அதேபோல் சொன்னமாதிரி கழுதையை திருப்பி தருவதும் இல்லை.

 அதனால் ராஜா, நண்பரே! என் கழுதை இப்போது வீட்டில் இல்லை. அதை வேறு ஒருவர் இரவலாகக் வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார் என்றார். சரி நான் வேறு யாரிடமாவது கேட்டுப் பார்க்கிறேன் என்று சொல்லி நண்பர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சமயம் பார்த்து ராஜாவின் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கழுதையின் கத்தும் குரல் கேட்டது.

ராஜா அவர்களே கழுதை வீட்டில் இருக்கிறது போலிருக்கிறதே! யாரோ இரவலாகக்கொண்டு சென்றதாகக் கூறினீர்களே என்று நண்பர் வியப்புடன் கேட்டார். ராஜாவுக்குக் கோபம் வந்த விட, நான் சொன்ன சொல்லை நீர் நம்பவில்லை. ஒரு கழுதையின் சொல்லைத்தான் நம்புகிறீர். என் மீது நம்பிக்கை இல்லாத ஒருவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்பதற்காகத்தான் வேறு ஒருவர் அதைக் கொண்டு சென்றிருக்கிறார் என்று சொன்னேன் என்றார். நண்பர் அவமானமடைந்து அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக