சென்னையில் 17 வயது சிறுவர் ஒருவர் மொபையில் போன் வாங்கி கேம் விளையாட மருத்துவர் ஒருவர் கணக்கிலிருந்து ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் திருட்டுத்தனமாக எடுத்து செலவு செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது...
சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து சிறுவர் ஒருவர் கேம் விளையாடுவதற்காக ரூ. 7 லட்சத்து 50 ஆயிரத்தைத் திருடி செலவு செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவர் தான் அளித்த புகாரைத் திருப்பிப் பெற்றதையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் சுதந்திரமாக வெளியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 76 ஆன மருத்துவர் வாழ்ந்து வருகிறார். மருத்துவர் வசிக்கும்
வீட்டின் மாடியில், அவர் வீட்டு பணிப் பெண் குடும்பத்தோடு வசித்து வருகின்றார். அந்தப்
பணிப் பெண்ணுக்கு 17 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
மருத்துவர் தனியாக வசித்து வருகிறார். இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில்
வசித்து வருகின்றனர்.
மருத்துவர் தனது செல்போனில் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனை உள்ளிட்டவற்றுக்கு பணிப்பெண்ணின்
மகன் உதவியாக இருந்து வந்துள்ளார். இதற்கிடையே அந்த சிறுவன் செல்போன் கேம்களுக்கு அடிமையாகி
இருந்துள்ளார்.
இதன் காரணமாக நல்ல செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசையில், மருத்துவரின் ஏடிஎம் கார்டுகளை
பயன்படுத்தி ரூ. 30 ஆயிரத்திற்கு செல்போன்களை வாங்கி குவித்துள்ளார். மேலும் அந்த செல்போன்களில்
கேம்களை வைத்து விளையாட, மேலும் சில சலுகைகளை கேம்களில் பெற லட்சக் கணக்கில் பணம் செலவழித்து
வந்துள்ளார். அதேபோல் தனது நண்பர்களுக்கும் குறிப்பிட்ட மருத்துவர் கணக்கிலிருந்து
பணம் எடுத்து செலவு செய்துள்ளார்.
பணம் செலவானது தொடர்பாகக் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து மருத்துவர் செல்போனிற்கு
வரும் மெஸஜ்களையும் அந்த சிறுவர் அழித்து வந்துள்ளார். இந்த சூழலில் வங்கிக்குச் சென்று
தனது கணக்கைப் பரிசோதித்தபோது மருத்துவருக்குத் தனது கணக்கிலிருந்து பணம் திருடுபோனது
தெரியவந்துள்ளது.
பணத்தை யார் திருடியிருப்பார்கள் என அறியாத முதிய மருத்துவர் சம்பவம் குறித்து சைபர்
க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில்
வழக்குப் பதிவு செய்த போலீசார் திருடப்பட்ட கணக்கிலிருந்து வாங்கப்பட்ட செல்போன்
இஎம்ஐ நம்பரைப் பரிசோதித்ததில் குற்றச் செயலை செய்த சிறுவர் பிடிபட்டார்.
பணத்தைத் திருடியது தனது பணிப் பெண் மகன் எனத் தெரியவந்ததும், மருத்துவர் தான் கொடுத்த
புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதையடுத்து போலீசார், அந்த சிறுவரை எச்சரித்து
வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சிறுவர், ரூ. 7 லட்சத்திற்கும் அதிகமான தொகையை கேம்களுக்காக
செலவு செய்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக