![]()
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு
இயல்பு நிலை படிப்படியாக திரும்பிவந்தாலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.
நேற்று ஒரே நாளில் புதிதாக 5,015 பேருக்கு பாதிப்பு
உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 6,56,385 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும்
தனியார் மருத்துவமனைகளில் 39 பேரும், அரசு மருத்துவமனைகளில் 26 பேரும் என மொத்தம்
65 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,252ஆக
அதிகரித்துள்ளது.
கடந்த மாதத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக
மீண்டும் ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில்
புதிதாக 1,750 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம்
ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் கொரோனா பரவவல் அதிகரித்ததற்கு கோயம்பேடு காய்கறி சந்தை முக்கிய காரணமாக கூறப்பட்டது. கோயம்பேடு காய்கறி
சந்தைக்கு வந்தவர்கள், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள், காவல் துறையினார் என பலரும்
கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்,
சென்னையின் ஹாட்ஸ்பாட்டாக மாறியதால் கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. திருமழிசைக்கு தற்காலிகமாக
மாற்றப்பட்டது. இதனால் வியாபாரிகள், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நீண்ட
இடைவேளக்குப் பின்னர் கடந்த மாதம் கோயம்பேடு சந்தை திறக்கப்பட்டது. பாதுகாப்பு வழிமுறைகள்
அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சந்தைக்கு வரும் வியாபாரிகள், தொழிலாளர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன்
கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரையிலான 22 நாட்களில் 2800க்கும்
மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், கோயம்பேடு காய்கறி
சந்தை தொடர்புடைய 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்
பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள்
மூலம் சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக