கரூரில் தனுஷ் பட பாணியில் நாட்டுக்கோழி முட்டை எனக் கூறி வெள்ளை கோழி முட்டையை விற்பனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான படம் கொடி. அதில் படத்தின் நாயகி வெள்ளை கோழி முட்டையை டீ தண்ணீர் முக்கி, வண்ணம் மாற்றி அதை நாட்டுக்கோழி முட்டை என்று விற்பனை செய்வார்.
கரூர் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளை கோழி முட்டையை, நாட்டுக்கோழி முட்டை என்று பெண் ஒருவர் கூவி விற்று.சென்றுள்ளார்.
முட்டையை வாங்கிய சில சமூக ஆர்வலர்கள், அந்த முட்டை ஓட்டை தேய்த்துப் பார்க்கும் போது வண்ணம் போனது. எனது காவல் துறையினரிடம் புகார் அளித்து அந்த பெண்ணை கைது செய்தனர்.
பின்னர் காவல் துறையினர் செய்த விசாரணையில், நாமக்கல் கோழிப் பண்ணைகளிலிருந்து வெள்ளை கோழி முட்டைகளை வாங்கி அதை ப்ரூ காபி தூள் கலந்த தண்ணீரில் நனைத்து எடுத்து, காய வைத்து நாட்டுக்கோழி முட்டை வண்ணத்தில் மாற்றியுள்ளார்.
பின்னர் அதை ஊர் முழுவதும் நாட்டுக்கோழி முட்டை என்று அந்த பெண் விற்றுவந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக