Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 நவம்பர், 2020

வழுக்கை விழாம, முடி கருகருன்னு கருப்பா இருக்க ஹேர் மாஸ்க் ,பெண்களோடு ஆண்களும் பயன்படுத்தலாம்!

 how to maintain balck hair: வழுக்கை விழாம, முடி கருகருன்னு கருப்பா இருக்க  ஹேர் மாஸ்க் ,பெண்களோடு ஆண்களும் பயன்படுத்தலாம்! - amazing hair mask to  maintain black hair by ...

நரை மறைய, கூந்தல் பொலிவாக இருக்க தான் ஹேர் மாஸ்க் என்றில்லை. கருகருன்னு இருக்கும் கூந்தல் நிறம் மாறாமல் இருக்கவும் ஹேர் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். அப்படியான ஹேர் மாஸ்க் என்னென்ன என்று பார்க்கலாம்.

முடி கருப்பாக இருக்க விரும்புபவர்கள் அவ்வபோது அந்த கருமையை பாதுகாக்கும் பராமரிப்புகளை உடன் செய்ய வேண்டும். இது முடி வளர்ச்சிக்கோ, இளநரை மறையவோ என்றில்லாமல் முடியின் கருமை நிறத்தை பாதுகாக்க செய்யும். அப்படி செய்யகூடிய ஹேர் மாஸ்க்கை வெளியில் வாங்க தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே செய்து கொள்ளலாம்.

என்னென்ன பொருள்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.இவைகள் எப்போதும் பக்க விளைவுகளை கொண்டிருப்பதில்லை. அதோடு நீண்ட காலம் வரை தலைமுடியை கருப்பாக வைத்திருக்க செய்கிறது. சற்று மெனக்கெட்டு தயாரிக்க வேண்டும் அவ்வளவே.

​நெய்

நெய் முடிக்கு நன்மை செய்யுமா என்பது குறித்து நிரூபனமான ஆராய்ச்சிகள் எதுவும் இல்லை. ஆனால் நெய் முடிக்கு என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்பதை பார்ப்போம்.

பசு நெய் வெண்ணெயிலிருந்து அதன் பிறகே நெய்யாக்கப்படுகிறது. இதை உச்சந்தலையில் பயன்படுத்துவதால் முடி எப்போதும் மென்மையாக இருக்கும். நெய்யில் இருக்கு ஆக்ஸிஜனேற்ற கலவைகள் முடியில் ஒட்டியிருக்கும் அழுக்குகளை வெளியேற்றி முடிக்கு மென்மையை தரக்கூடும். நெய்யில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ போன்றவை உள்ளது.

இதில் புரதங்களும் அடங்கியிருப்பதால் உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்துவது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க செய்யும். நெய்யை மட்டுமெ கொண்டு ஹேர் மாஸ்க் செய்யலாம் என்றும் பரிந்துரை செய்யப்படுகிறது.நெய் வீட்டில் காய்ச்சி பயன்படுத்தினால் கூந்தலுக்கு நிச்சயம் வலிமை கிடைக்கும்.

தேவை - நெய் - அரை லிட்டர்

நெல்லிக்காய் - சாறு பிழியவும்

நெல்லிக்காய் தைலம், நெல்லிக்காய் ஷாம்பு, நெல்லிக்காய் எண்ணெய் என்று கூந்தலுக்கு அதிகம் நெல்லிக்கனியை பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். முடி உதிர்வுக்கு, முடி வளர்ச்சிக்கு நெல்லிக்காய் தைலத்தை தான் பரிந்துரை செய்கிறார்கள்.

நரைமுடிக்கு நெல்லிக்காய் நல்ல தீர்வாக இருக்கிறது. கூந்தலில் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் முடி உதிர்வு குறைந்து முடி வளர்ச்சியும் ஊக்குவிக்க கூடியது. பொடுகு மற்றும் உச்சந்தலையில் அரிப்பை கட்டுப்படுத்துகிறது.

அதனால் முடி ஆரோக்கியமாக வலுப்படுத்துகிறது. கொலாஜன் அளவை அதிகமாக்கி முடிக்கு நன்மை செய்கிறது. முடிக்கு கருமையையும் பளபளப்பையும் தருகிறது. தேவை-நெல்லிக்காய் கொட்டையை நீக்கி மிக்ஸியில் அடித்து அதன் சாறை அரை லிட்டர் அளவு எடுத்துகொள்ளவும்.

​அதிமதுரம் - வேர்

ஆயுர்வேதத்தின் சிறந்த மூலிகை இது. கூந்தலுக்கு உண்டாகும் சேதத்தை தடுக்கிறது. உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்க உதவுவதால் கூந்தலில் அழுக்குகள் சேர்வதில்லை. பொடுகு , அரிப்பு பிரச்சனையில்லாமல் முடி வளர்ச்சி சீராக இருக்கிறது.

வழுக்கை விழாமல் தடுக்கிறது, முடி உதிர்ந்தாலும் புதிய முடிகள் வளர்வதற்கும் இவை துணைபுரிகிறது..ஆண்களும் பெண்களும் அதிமதுர வேரை கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தினால் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம். சரியான முறையில் இதை பயன்படுத்த வேண்டும்.

கூந்தலில் கேடு தரும் பாக்டீரியாக்கள் முடி உதிர்வை ஊக்குவிக்கும் போது இது ஒரு சிறந்த பாக்டீரியா முகவராக செயல்படுகிறது. இது முடியின் ஆழம் வரை சுத்தம் செய்ய உதவுகிறது. முடியை பளபளப்பாக்கி முடியின் நிறத்தை மேம்படுத்துவதால் முடி கருமையாக இருக்கும்.

அதிமதுர வேர் பொடி - 100 கிராம்

​என்ன செய்யலாம்?

அடிகனமான பாத்திரத்தில் நெய்யை விட்டு, நெல்லிக்காய் சாறு, அதிமதுர வேர் பொடி மூன்றையும் நன்றாக கலக்க வேண்டும். நெய்யோடு சாறு சேர்த்து கலப்பது சிரமமானது தான்.ஆனால் இரண்டும் நன்றாக சேரும் படி பெரிய மரக்கரண்டி கொண்டு கலக்க வேண்டும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து கரண்டியால் கலக்கி கொண்டு வரவேண்டும். இந்த சாறில் இருக்கும் நீர்த்தன்மை சலசலப்பு அடங்கும் வரை கலக்கவும். இதை இறக்கி ஆறவைத்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும். இது மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். ஆண்கள், பெண்கள் வளரும் குழந்தைகள் எல்லாருமே இதை பயன்படுத்தலாம். எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

​பயன்படுத்தும் முறை

இந்த எண்ணெயை தலைக்கு குளிக்கும் போது பயன்படுத்தலாம். கூந்தலை சிக்கில்லாமல் சீவி நன்றாக படிய வாரவேண்டும். கை விரல்களால் எண்ணெயை தோய்த்து உச்சந்தலையின் ஸ்கால்ப் பகுதியில் முதலில் விரல்களை நுழைத்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு கூந்தலின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை தடவ வேண்டும்.

நன்றாக விரல்களால் மசாஜ் செய்து பிறகு சீப்பு கொண்டு வாரினால் எண்ணெய் நன்றாக கூந்தலின் ஆழம் வரை இறங்கும். இந்த ஹேர் ஆயில் மாஸ்க் முடிந்ததும் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை ஹேர் கவர் போட்டு பிறகு மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். உங்கள் வசதிக்கேற்ப மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை இதை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தினால் உங்களின் கூந்தலின் கருமை நிறம் கூடியிருப்பதை பார்க்கலாம். இளநரை கூட படிப்படியாக மறைந்துவிடும்.

நெய் சேர்ப்பது கூந்தலுக்கு பக்க விளைவை உண்டாக்காது. உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் சிறிது எடுத்து கூந்தலில் தடவி 2 மணி நேரம் காத்திருந்து பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்தலாம். 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக