Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 நவம்பர், 2020

மூன்று வரம்... அழகான மூக்கா? பணமா? சுவாரஸ்ய கதை - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிங்க சிரிங்க..!!

(திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறாள்.)

 

மனைவி : என்னங்க.. திடீர்னு பூகம்பம் வந்திடுச்சு.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.

கணவன் : நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா? இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?

மனைவி : 😬😬

-------------------------------------------------------------

ஆசை...!!

------------------------------------------------------------- 

🎲 ஏழை ஒருவன் ஒரு தேவதைக்கு திருப்தி ஏற்படும்படி நடந்து கொண்டான். அந்த தேவதை அவன் முன்னர் தோன்றி, மூன்று பகடை காய்களை கொடுத்து, அவற்றை உருட்டி மூன்று வரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியது.

 

🎲 மகிழ்ச்சி அடைந்த அந்த மனிதன் வீடு திரும்பி, தன் மனைவியிடம் விவரத்தை சொன்னான். பண ஆசை பிடித்த அவளோ பணத்திற்காக காயை உருட்டும்படிச் சொன்னாள்.

 

🎲 அதற்கு அவன், நம் இருவருக்கும் மூக்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறது. ஊரார் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். முதலில் அழகான மூக்கு வேண்டும் என்று காயை உருட்டுவோம் என்றான். ஆனால் பணத்தை விரும்பிய மனைவியோ காயை உருட்ட விடாமல் கணவனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

 

🎲 கணவனோ திமிறிக் கொண்டு கையை விடுவித்து எங்கள் இருவருக்கும் அழகான மூக்குகள் அமையட்டும். மூக்குகளைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம் என்று காயை உருட்டி விட்டான்.

 


👃 உடனே அவர்கள் இருவர் உடம்பிலும் அழகிய ஆனால், பல மூக்குகள் தோன்றி விட்டன. பல மூக்குகள் இருப்பது அவர்களுக்கு மிகவும் தொந்தரவாக இருந்ததால் மூக்குகளே வேண்டாம் என்று காயை உருட்ட அவர்கள் இருவரும் சம்மதித்தார்கள்.

 

👃 அதன்படி உருட்டிய போது மூக்குகளே இல்லாமல் போய்விட்டன. இப்படி இரண்டு வரங்கள் வீணாகிவிட்டன. என்ன செய்வது? என்று அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கேட்பதற்கு இனி ஒரே ஒரு வரம் தான் மீதி இருந்தது.

 

👃 மூக்குகள் இல்லாத காரணத்தால் அவர்களின் முகம் அதிக விகாரமாக இருந்தது. இந்த நிலையில் வெளியில் போக அவர்கள் மிகவும் வெட்கப்பட்டார்கள். மூக்குகள் இல்லா முகம் எப்படி வந்தது? என்று ஊரார் கேட்பார்களே, அதற்கு என்ன பதில் சொல்வது? என்று அஞ்சினார்கள்.

 

👃 தங்கள் மடமையை நினைத்து வருத்தப்பட்டார்கள். அதனால் அழகற்ற பழைய மூக்கு தங்களுக்கு வந்தால் போதும் என்று காயை உருட்டினார்கள். 

 

பேராசை பெரும் நஷ்டம்...!!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக