-----------------------------------------------------------
சிரிக்க... சிரிக்க... சிரிப்பு...!!
----------------------------------------------------
நீதிபதி : நீங்க ஏன் வீட்டு சொந்தக்காரனை கொலை பண்ணுணீங்க?
ராமு : அவர்தான் எசமான், காலி பண்ணு... காலி பண்ணு... சொன்னாரு!
நீதிபதி : 😝😝
----------------------------------------------------
பாபு : கட்சியில் போதிய பணம் இல்லாம இருக்கலாம். அதுக்காக இப்படியா?
சீனு : என்னாச்சி?
பாபு : தலைவர் பேச்சு களைப்புல, சோடா கேட்டா, சோடாவை அவர் கண்ணுல காமிச்சிட்டு, காமிச்சிட்டு ஒளிச்சி வெச்சிடுறாங்க.
சீனு : 😆😆
----------------------------------------------------
இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கா?
----------------------------------------------------
இந்த கொசு, மூட்டை பூச்சி எல்லாம் நம்ம ரத்தத்தை குடிக்க நம்மல கடிக்குது...
ஆனா
.
.
.
.
இந்த எறும்பு நம்மல எதுக்கு கடிக்குதுன்னு தான் தெரிய மாட்டிங்குது...
----------------------------------------------------
அழகிய மொழி... தமிழ்...!!
----------------------------------------------------
அ-விற்கு அடுத்து ஆ வருவது ஏன்?
அரசனும், ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட...
இ-க்கு பின் ஈ வருவது ஏன்?
இருப்பவன், ஈய வேண்டும் என இயம்பிட...
உ-விற்கு பின் ஊ வருவது ஏன்?
உழைப்பே, ஊக்கம் என உணர்த்திட...
எ-விற்கு அடுத்து ஏ வருவது ஏன்?
எதையும், ஏன் என்று சிந்தித்து பார்க்க...
ஐ மட்டும் எதனோடும் சேராமல் தனித்து இருப்பது ஏன்?
அதற்கு நான் (ஐ) என்ற அகம்பாவம் இருந்தால் தனிமை படுத்தப்படுவாய் என்பதை உணர்த்த...
ஒ-விற்கு பின் ஓ வருவது ஏன்?
ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட...
எனவே நான் (ஐ) தான் என்கிற குணம் ஒரு மனிதனை தனிமைப்படுத்தி,
ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளிவிடும்...
----------------------------------------------------
இப்படி சொல்லி பாருங்கள்...!!
----------------------------------------------------
மனைவியிடம் வாயை மூடு என்று சொல்வதைவிட...
உன் இதழ்கள் மூடி இருக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லி பாருங்கள்...
----------------------------------------------------
புதிர் கேள்வி...!!
----------------------------------------------------
ஒரு ஆப்பிள் மரக்கிளையில் 12 ஆப்பிள்கள் இருந்தன. அவ்வழியே 12 பேர் பயணித்தனர். அவர்களில் தலா ஒரு பழம் பறிக்க 11 ஆப்பிள்கள் மரத்தில் எஞ்சியிருந்தன. இது எப்படி?
விடை :
'தலா" என்பது ஒருவனின் பெயராகும். மற்றவர்கள் 11 பேரும் பழம் பறிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக