Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 13 பிப்ரவரி, 2021

ரேஷன் இலவச அரிசிக்கு பதிலாக 3,000 ரூபாய்... புதுச்சேரி மக்களுக்கு எலக்ஷன் ஜாக்பாட்!

  puducherry ration cardக்கான பட முடிவுகள்

புதுச்சேரியில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 மாதங்களுக்கான அரிசிக்கு பதிலாக 3 ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.ரேஷனில் இலவச அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.

இதுதொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "முதலமைச்சர் நாராயணசாமி கடந்த பட்ஜெட் கூட்டத்தின்போது இலவச அரிசிக்கான பணம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவித்தார்.

தற்போது அரசின் கையிருப்பில் போதுமான நிதி இருப்பதால் சமூக நல அமைச்சர் கந்தசாமியின் பரிந்துரையின்படி, புதுச்சேரியில் உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 மாதங்களுக்கான அரிசிக்கு ஈடாக ரேஷன் அட்டை ஒன்றுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்குவதற்காக ரூ.52 கோடியே 84 லட்சம் வழங்க முதலமைச்சர் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கான கோப்பு கவர்னர் கிரண்பெடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு அனைத்து சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி -ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 1 லட்சத்து 76 ஆயிரத்து 134 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள்" அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!