இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படவிருக்கும் நிலையில், சில சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன...
இந்தியாவின் மிகப் பழைமையான அரசு துறை
வங்கிகளில் ஒன்றான அலகாபாத் வங்கி விரைவில்
இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட இருக்கிறது. வரும் பிப்ரவரி 15ஆம் தேதியன்று இரு
வங்கிகளும் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (பிப்ரவரி 12) இரவு 9 மணி தொடங்கி திங்கள் (பிப்ரவரி 15) காலை 9 மணி வரை
இணைப்பு பணிகள் நடைபெறும். 2020ஆம் ஆண்டு பட்ஜெட் அறிக்கை தாக்கல்
செய்யப்பட்டபோது, சில அரசு துறை வங்கிகள் இணைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் அறிவித்திருந்தார்.
இதன்படி, ஏற்கெனவே சில வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் அலகாபாத்
வங்கியை இந்தியன் வங்கியுடன் இணைக்கும் பணி இன்று தொடங்குகிறது. இதனால்
வாடிக்கையாளர்கள் என்னென்ன மாற்றங்களை சந்திக்க நேரிடும்?
இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எந்த
மாற்றமும் இருக்காது. எனினும், அலகாபாத் வங்கியின் வாடிக்கையாளர்கள் நெட்
பேங்கிங், பணப் பரிவர்த்தனை, செக் போன்ற சேவைகளை பயன்படுத்துவதில் தற்காலிக
பிரச்சினைகள் ஏற்படும்.
ஏற்கெனவே அலகாபாத் வங்கியில் நெட் பேங்கிங், பணப் பரிவர்த்தனை, செக் வழங்குதல்
போன்ற சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி
இணைக்கப்பட்ட பிறகு அனைத்து சேவைகளையும் வழக்கம் போல பயன்படுத்த முடியும்.
அலகாபாத் வங்கி 155 ஆண்டுகளுக்கு முன் 1865ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியன்று
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் தொடங்கப்பட்டது. வங்கி தொடங்கப்பட்டு 20
ஆண்டுகளில் தலைமையகம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது.
மற்ற
வங்கிகளைக் காட்டிலும் அலகாபாத் வங்கிக்கு மிக அதிகமான நிலையான சொத்துகள்
இருக்கின்றன. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 3,230 கிளைகள் இருக்கின்றன. இவற்றில்
பெரும்பாலானவை உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கின்றன. தற்போதைய நிலையில்
அலகாபாத் வங்கியில் 21,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த சூழலில் அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்படுகிறது. இந்தியன்
வங்கி சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக