Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 1 செப்டம்பர், 2021

"மணமகள் தேவை" என டீக்கடை முன்பு போர்டு வைத்த இளைஞர்... 90ஸ் கிட்ஸ்களுக்கு புதிய ஐடியா...

 

கேரளாவில் தனக்கு மணமகள் தேவை என டீக்கடை முன்பு இளைஞர் ஒருவர் போர்டு வைத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்
 
கேரளாவின் வல்லாச்சிரா பகுதியைச் சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன் இவர் டீக்கடை ஒன்றை நடத்த வருகிறார். இவர் தன் டீக்கடைக்கு முன்பு தனக்கு வாழ்க்கை துணை தேவை என்றும், ஜாதி மதம் பேதமில்லை எனவும் எழுதி தனது தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டுள்ளார். அந்த போர்டுடன் அவர் தன் டீக்கடை முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் வைரலாக பரவியது.

இது குறித்து உன்னி கிருஷ்ணன் கூறும்போது : "எனக்கு தலையில் ஒரு கட்டி இருந்தது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அக்றவிட்டனர். தற்போது முழுவதும குணமாகி அடுத்த கட்ட வாழ்க்கைக்கு செல்ல முடிவு செய்து கடந்த பிப்ரவரி மாதம் ஒரு லாட்டரி கடை ஒன்றை திறந்துள்ளேன். தற்போது அதை டீக்கடையாக விஸ்தரித்துள்ளேன். தற்போது வருமானம் நன்றாக இருக்கிறது. இந்த நேரத்தில் திருமணம் செய்யது கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். தரகர் மூலம் பெண் பார்க்கவிருப்பமில்லை. வீட்டில் உறவினர்கள் ஜாதகத்தை வைத்துக்கொண்டு பெண் பார்த்து வருகின்றனர். ஆனால் இதுவரை எதுவும் அமையவில்லை. அதனால்தான் இந்த போர்ட்டை வைத்தேன். இந்த புகைப்படத்தை பகிர்ந்த பின்பு பல இடங்களிலிருந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. வெளிநாடுகளிலிருந்து கூட அழைப்புகள் வருகிறது. தற்போது போன் பேசவ நேரம் சரியாக இருக்கிறது" என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக