ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை அதிகமான டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து ஜியோ நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஜியோ நிறுவனம் கிட்டதட்ட 1.9 கோடி வையர்லெஸ் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் மூலம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 423.83 மில்லியானகக் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
அதேசமயம் ஏர்டெல் நிறுவனம் 2.7 லட்சம் புதிய வையர்லெஸ் வாடிக்கையாளர்களைத் தனது நெட்வொர்க் கீழ் இணைத்துள்ளது. எனவே
இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 354.46 மில்லியன் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல்
வோடபோன் ஐடியா நிறுவனம் 10.7 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து 269.99
மில்லியன் வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. மேலும் கடந்த செப்டம்பர்
மாதம் மட்டுமே 20.7 மில்லியன் வாடிக்கையாளர்கள் வெளியேறி நாட்டின் மொத்த
டெலிகாம்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.6 பில்லியன் ஆக உள்ளது என டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் சமீபத்தில் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கட்டண உயர்வானது வரும் நவம்பர் 25-ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. குறிப்பாக ஏர்டெல் விலை உயர்வை அறிவித்ததையடுத்து வோடபோன் ஐடியா விலை உயர்வை அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக