அதிகபட்ச வைப்பு தொகையான 10,000 ரூபாய்க்கு மேல் வரவு வைக்கப்பட்டால் 0.50% அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும்.
வரும் புத்தாண்டு முதல், அமல்படுத்தப்படவிருக்கும் புதிய விதியின் கீழ் இனி இந்த வங்கியில் 10,000 ரூபாய்க்கு மேல் வரவு வைத்தாலே, வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தபால்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (IPPB) தனது வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் புத்தாண்டும் துவங்கி இந்த வங்கியில் குறிப்பிட்ட வகை கணக்குகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்புக்கு மேல் பணம் வரவு வைத்தால், வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வீட்டின் வாசல் படியில் வங்கி சேவை’ என்ற நோக்கத்துடன் கடந்த 2018ம் ஆண்டு துவங்கப்பட்டு, சுமார் 4 கோடி வாடிக்கையாளர்களுடன் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் ஆனது வணிக கணக்கு மற்றும் 3 வகையான சேமிப்பு கணக்குகளை கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் பலவிதமான அம்சங்கங்களையும், செயல்பாட்டையும் கொண்டுள்ளன.
அறிந்து கொள்வோம்
,
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக