--------------------------------------------------
வாய் விட்டு சிரிங்க...!!
--------------------------------------------------
உயரமான அந்தக் கட்டிடத்திற்குள் இரண்டு திருடர்கள் நுழைந்தனர். தாங்கள் கொண்டு வந்திருந்த பைக்குள் விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தனர்.
கபாலி : ஜன்னல் வழியாகக் குதிப்போம் என்றான்.
கந்தன் : நாம் பதின்மூன்றாவது மாடியில் இருக்கிறோம்... இங்கிருந்தா குதிப்பது? என்று கேட்டான்.
கபாலி : மூட நம்பிக்கைக்கு இதுவா நேரம் என்று கத்தினான்.
கந்தன் : 😬😬
--------------------------------------------------
மனைவி தீர்த்த சிக்கல்...!!
--------------------------------------------------
மனோதத்துவ டாக்டரிடம் வந்த ஒருவர், டாக்டர் நீங்கள் தான் என்னை எப்படியாவது குணப்படுத்த வேண்டும். என்றார்.
உங்களுக்கு என்ன நோய்? விளக்கமாக சொல்லுங்கள்? என்று கேட்டார் டாக்டர்.
இரவில் நான் கட்டிலின் மேல் படுத்தவுடன் கட்டிலின் கீழ் யாரோ இருப்பதைப் போல தோன்றுகிறது.
கட்டிலை விட்டுக் கீழே இறங்கிப் பார்க்கிறேன். அங்கு யாருமே இல்லை. பயம் போவதற்காக நான் கட்டிலின் கீழேயே படுத்துக் கொள்கிறேன். இப்பொழுது கட்டிலின் மேல் யாரோ படுத்துக் கொண்டிருப்பதைப் போல தோன்றுகிறது. இப்படியே இரவு முழுவதும் கட்டிலின் மேலும் கீழும் மாறிப் மாறிப் படுத்துக் கொண்டே இருக்கிறேன். இதனால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல இருக்கிறது, என்றான்.
உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். வாரந்தோறும் இரண்டு முறை தவறாமல் என்னை இரண்டாண்டுகள் பார்க்க வேண்டும். என்னை ஒவ்வொரு முறை சந்திப்பதற்கும் ரூ.100 கட்டணம் தர வேண்டும். என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார் டாக்டர்.
நிறைய செலவாகும் போல இருக்கிறதே? என்னால் இவ்வளவு தொகையைப் புரட்ட முடியுமா என்று தெரியவில்லை. எதற்கும் என் மனைவியைக் கேட்டு அடுத்த வாரம் சொல்கிறேன், என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார் அவர்.
ஒரு வாரம் கழித்து டாக்டருக்குப் போன் வந்தது. அதில் அவர், டாக்டர் என் மனைவி என் நோயைக் குணப்படுத்தி விட்டாள், என்றார்.
டாக்டரால் இதை நம்ப முடியவில்லை, எப்படி? என்று கேட்டார்.
நான் படுக்கும் கட்டிலின் கால்களை என் மனைவி வெட்டி விட்டாள், என்று பதில் வந்தது.
--------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
--------------------------------------------------
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
--------------------------------------------------
பொருள் :
--------------------------------------------------
தம்மக்களே தம்முடைய பொருட்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருட்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக