பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் பல அருமையான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
மேலும் சமீபத்தில் 91mobiles வெளியிட்ட தகசவலின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று 4ஜி சேவை
அறிமுகப்படுத்தும்
என்று கூறப்படுகிறது. ஆனால் இந்நிறுவனம் சரியான 4ஜி வெளியீட்டு தேதியை
இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) உடன் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4ஜி சேவைகளுக்கு இந்திய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியா முழுவதும் 1 லட்சம் தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவவுள்ளது. இதில் பீகாரில் மட்டும் 40,000 டெலிகாம் டவர்களையும் நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக