இது தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், " பக்ஸ்மிரர் (Bugsmirror) நிறுவனத்தை சேர்ந்த அமன் பாண்டே குறைபாடுகளை புகாரளிக்கும் மற்றும் சமர்ப்பிப்பதில் சிறந்த ஆராய்ச்சியாளராக கருதப்படுகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டில் மட்டும் பாண்டே 232 குறைபாடுகளை கண்டறிந்து அவை தொடர்பாக விரிவான தகவல்களை சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் எங்கள் திட்டத்தை மிகவும் வெற்றிகரமானதாக்குவதில் அமன் பாண்டே முக்கியப் பங்கு வகித்து உள்ளார்" என்று குறிப்பிட்டு இருக்கிறது.
இதனை தொடர்ந்து இந்திய ஆராய்ச்சியாளர் அமன் பாண்டே, 2021-ல் கூகுளின் பக் பவுண்டி ப்ரோகிராமில் (bug bounty program) முதலிடம் பிடித்துள்ள தகவலையும் கூகுள் வெளிப்படுத்தி உள்ளது. தனது வெப்சைட் மற்றும் சர்விஸ்களை அனைவருக்கும் பாதுகாப்பான ஒன்றாக மாற்றுவதில் அமன் பாண்டேயின் பங்களிப்புகளுக்காக கூகுள் இப்போது அவரை அங்கீகரித்துள்ளது. இது கூகுளின் bug bounty program-ன் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனம் தனது சாப்ட்வேரில் உள்ள சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை கண்டறியும் சைபர் பாதுகாப்பு நிபுணர்களுக்கு வெகுமதியையும் அளிக்கிறது.
Bugsmirror நிறுவனம் இந்தூரிலிருந்து இயங்குகிறது. NIT Bhopal-ல் படித்த பட்டதாரியான அமன் பாண்டே, பக்ஸ்மிரரின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார். 2019-ஆம் ஆண்டு முதல் பாண்டே குறைபாடுகளை சமர்ப்பித்து வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள், ஆப்பிள் மற்றும் பல நிறுவனங்களின் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்த, பலப்படுத்த நாங்கள் உதவுகிறோம். நாங்கள் பிழைகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட குழுவிற்கு புகாரளிக்கிறோம்" என்று பக்ஸ்மிரர் தனது வெப்சைட்டில் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக