Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 21 பிப்ரவரி, 2022

அதிகாலை நிழல்... மதிய நேர நிழல்... நரிக்கு நடந்த விபரீதம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-----------------------------------------

குமுதா : இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?
அமுதா : எதுக்கு?
குமுதா : ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு!
அமுதா : 😏😏
------------------------------------------
ராமு : எதையோ பத்தி ரொம்ப ஆழ்ந்து சிந்திச்சிக்கிட்டிருக்கீங்க போல..
சோமு : எதைப் பற்றி சிந்திக்கிறதுன்னுதான் சிந்திச்சிக்கிட்டிருக்கேன்! வேற என்ன?
ராமு : 😖😖
------------------------------------------
நரியும்... அதன் நிழலும்...!!
------------------------------------------
ஒரு நரி அதிகாலையில் எழுந்து மேற்கு திசை நோக்கி வேட்டைக்கு சென்றது. கிழக்கே இருந்து வந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் தெரிந்தது.நரி குதுகலமானது. 'நான் பெரிய ஆள் போல. அதுவும் இந்த காட்டின் ராஜாவாக இருக்கும் சிங்கத்தை விடவும் பெரியவனாக இருக்கிறேன் போல". என நினைத்துக் கொண்டே வேட்டைக்குச் சென்றது.

செல்லும் வழியில் நரி ஒரு சிங்கத்தை கண்டது... சிங்கமோ சற்று முன்னர்தான் ஒரு மானை வேட்டையாடி அதை உண்ட களைப்பில் மெதுவாக நடந்து வந்துக்கொண்டிருந்தது. நரியும் தான் மிக பெரியவன் என நினைத்துக் கொண்டு சிங்கம் வரும் வழியில் நடந்து சென்றது. சிங்கமும் நரியை ஒன்றும் செய்யாமல் நடந்து சென்றது. நரிக்கோ மிகவும் சந்தோஷம். நாம் சிங்கத்தை விடவும் பெரியதாக இருப்பதனால் சிங்கம் தன்னைக்கண்டு பயந்து சென்றது. என நினைத்துக் கொண்டு அன்று மாலை தன்னுடைய வீட்டிற்கு சென்றது.

மாலை தன் குகைக்கு சென்றதும் நரி காட்டில் உள்ள மிருகங்களை அழைத்தது. அனைத்து மிருகங்களும் நரியின் அழைப்பிற்கு வருகை தந்தன. நரி அனைத்து மிருகங்களிடமும் 'இனிமேல் நான் தான் இந்த காட்டிற்கு ராஜா" என்று கூறியது. 🐘யானையோ இதை நாங்கள் ஏற்க முடியாது என்றது.

உடனே நரி காலையில் நடந்ததை கூறி சிங்கமே என்னைப் பார்த்து பயந்தது என்றது. கூட்டத்தில் இருந்த மானோ சிங்கத்தை உன் முன் மண்டியிடச் சொல் பிறகு உன்னை இந்த காட்டிற்கு ராஜாவாக்குவோம் என்றது.

அடுத்த நாள் நரி அந்த சிங்கத்தை தேடிச் சென்றது. செல்லும் வழியில் சிங்கம் தன்னுடைய பாதையை நோக்கி வருவதைக் கண்டு நரி கர்வத்துடன் நின்றது. சிங்கம் வந்தவுடன் சிங்கத்தைப் பார்த்து 'என் முன்னால் மண்டியிடு" என்று நரி கூறியது. 

சிங்கம் மிகவும் கோபம் கொண்டு, தரக்குறைவாக பேசிய நரியை பார்த்து உன்னை மன்னித்து விடுகிறேன் உடனே இங்கிருந்து செல் என்றது. நரியோ சிங்கம் தன்னை கண்டு பயந்து விட்டது என நினைத்து 'முடியாது" என்று பதில் கூறிக்கொண்டே தன்னுடைய நிழலைப் பார்த்தது.

அது மதிய நேரம்... நிழல் உண்மையான அளவில் இருந்தது. இப்போதுதான் நரிக்கு புரிந்தது சூரிய ஒளியில்தான் தன்னுடைய நிழல் பெரிதாக இருந்தது என்று. நரி தன் முன்னால் இவ்வாறு நடந்து கொள்வதை பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கம் ஒரே அடியினால் நரியைக் கொன்றது. பாவம் அந்த முட்டாள் நரி.

நீதி :

முட்டாள் தனமாக இருந்தால் உயிரை கூட இழக்க நேரிடும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக