ஒப்போ நிறுவனம் முதல் டேப்லெட் சாதனத்தை வரும் பிப்ரவரி 24-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் சாதனத்திற்கு ஒப்போ பேட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ டேப்லெட்
குறிப்பாக இந்த ஒப்போ டேப்லெட் சாதனம் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்புஇப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ டேப்லெட் சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒப்போ பேட் ஆனது 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொணடு வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதியடேப்லெட் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஅந்நிறுவனம்.
ஒப்போ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ பேட்.
ஒப்போ பேட் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த சாதனம் மிக அருமையாக பயன்படும். அதேபோல் கலர்ஓஎஸ் 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஒப்போ பேட் சாதனம் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ பேட் ஆனது 8080 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக